இலக்கியம்

பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்!

தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன.

‘அணையா விளக்கு’ தந்த ஆர்.வி எனும் அறிஞர்!

இருபதாம் நூற்றாண்டு கண்ட சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் – படைப்பிலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்.வி., என்று அழைக்கப்படும் ஆர்.வெங்கட்ராமன். தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், 1918-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் நாள், இராமையர்-சீதாலட்சுமி இணையருக்குப் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்குகொண்டு துண்டுப் பிரசுரங்கள் எழுதித் தருவது, பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்புவது போன்ற பணிகளில் ஈடுபட்டார். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் விடுதலைப் போராட்டத்துக்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1956-ம் ஆண்டு வெளிவந்த இவருடைய […]

பொது வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்த தோழர்!

தோழர் ஆர்.மணி. திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்.

அறநெறித் தமிழ்க் கழகத்தை உருவாக்கிய அறிஞர்!

தமிழகத்தின் வடவெல்லையில் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர்கள் தெலுங்கு பயிலவேண்டிய சூழ்நிலை இருந்ததை மாற்றிய பெருமகான் வடவெல்லை மீட்புத் தந்தை மங்கலங்கிழார்.

மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்!

மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் ஜி. நாகராஜன். எழுத்தில் மட்டுமல்ல. சொந்த வாழ்க்கையிலும். இது அவரைப் பற்றிப் படிக்கும் போது தெரிகிறது. ஜி. நாகராஜனின் படைப்புகள், தனித்துவமானவை. அதற்கு முக்கியக் காரணம், அவர் பேசிய (எழுதிய) விஷயங்கள். அவையாவும் அக்காலத்தில் அவருடைய சக எழுத்தாளர்கள், பேசத் தயங்கியவை. தமிழ் இலக்கிய உலகில் அதுவரை நிலவி வந்த, காமத்தின் எல்லைகளை அனாயாசமாகத் தாண்டியவர் ஜி. நாகராஜன். ஜி. நாகரஜனின் படைப்புகளில் ஒளிவுமறைவு என்பதே கிடையாது. எல்லாமே நேரடியான […]

படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம்!

அருமை நிழல் :  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் நடக்கும்போது – படப்பிடிப்புத் தளத்தில் தான் சாப்பிடும் அதே உணவு வகைகளையே உடன் பணியாற்றும் சக நடிகைகள், லைட்மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் என்று அனைவருக்கும் பாகுபாடில்லாமல் வழங்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் வழக்கமான செயல்பாடாக இருந்திருக்கிறது. அம்மாதிரியான படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நிற்பவர் ஜெயலலிதா.