தமிழ்நாடு

விஜய்யை பிரதமர் பதவி நோக்கி நகர்த்துவது யார்?

“நல்ல காலம் வருது அல்லது கெட்ட காலம் வருது” என்று முன்பெல்லாம் கிராமங்களிலும் பெருநகரங்களிலும் குடுகுடுப்பைக்காரர்கள் சத்தம் எழுப்பியபடி ஓங்காரமாய் குறி சொல்வதை கேட்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அம்மாதிரியான குடுகுடுப்பைக்காரர்களின் சத்தம் குறைந்துபோய் விட்டாலும் அதே வேலையைத்தான் கருத்துக்கணிப்பு அல்லது சர்வே என்கிற பெயரில் சத்தத்துடன் செய்து கொண்டிருக்கின்றன வெவ்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள்.  மூன்றரை மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலையொட்டியும் அதே மாதிரி நவீனத் தொழில்நுட்பக் குடுகுடுப்பை முழக்கி, விதவிதமாக ஆட்சி யார் அமைப்பார்கள் என்று […]

பேரவையில் மக்கள் குரலை எதிரொலித்த பிரேமலதா!

சமூக நலத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் (27.08.2026) பல்வேறு கட்சியினர் வெவ்வேறு விவாதங்களை முன்வைத்து பலத்த அமளியும் கூச்சலும் எழுப்பினர். இந்தநிலையில் பேச எழுந்த தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், “கேப்டன் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, தன்னுடைய பேச்சைத் துவக்கினார். சட்டசபையில் எவ்வளவோ மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற வேண்டிய நிலையில், ஏன் இவ்வளவு சண்டைகள்? ஏன் இவ்வளவு தூரத்திற்கு சட்டமன்றத்தில் […]

சட்டசபை நேரடி ஒளிபரப்பு யாரை வெளிக்காட்டுகிறது?

”தமிழக சட்டசபை நிகழ்வுகளை தணிக்கை செய்யப்படாமல் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்” என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் முடிந்த பிறகு பேச ஆரம்பித்தன. அதன் விளைவாக தற்போது நடந்து கொண்டிருக்கிற தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நேரலையாக – எந்தவித தணிக்கையுமின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சட்டசபை நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்காத இளைஞர்கள் கூட, தற்போது இந்த நேரலை ஒளிபரப்பை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். சீரியல் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் கூட இந்த நேரலை நிகழ்வுகளைப் பார்க்கும் […]

ஏன் தவறான முடிவுகளை எடுக்கிறது தவெக அரசு?

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டிருக்கிற அறிவிப்பு தமிழ் உணர்வாளர்களுக்கிடையே பலத்த விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. ஏன்? என்ன காரணம்? அரசின் அறிவிப்புப்படி தமிழகத்தில், ஓடும் அரசுப் பேருந்துகளில் நடத்துநர்களை (கண்டெக்டர்கள்) நியமிக்கும் பொறுப்பு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து வடநாட்டைச் சேர்ந்தவர்கள் பேருந்து நடத்துநர்களாக நியமிக்கப்படலாம் என்கிற கருத்தும் உருவாகி, போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த அறிவிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே வந்து குவிந்திருக்கிற வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையும் […]

முதல்வர் விஜய்யிடம் இருக்கும் திமுக ஃபைல்ஸ்!

தற்போது நடந்துவரும் சட்டமன்றத் தொடரில் பல்வேறு காரசாரமான விவாதங்கள் அரங்கேறியிருக்கின்றன.  பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில், லாட்டரி அதிபரான தன்னுடைய மாமனாரிடமிருந்து 900 கோடி ரூபாயை ஏன் மு.க.ஸ்டாலின் வாங்கினார் என்ற கேள்வியைக் கேட்டார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் சட்டென்று அந்தக் கேள்வியைச் சமாளித்து பதிலளிக்க முடியாத நிலையில், “அதைக் கொடுத்தது உங்கள் மாமனார் தானே. அவரிடமே ஏன் கொடுத்தார் என்று கேளுங்கள்” என்று பேச, தொலைக்காட்சி நேரலையில் வெளிவந்த அந்தக் காட்சி […]

காது கூசும் பேச்சுக்களுக்கு கடிவாளம் போட வேண்டும்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் : தமிழகத்து மேடைகளிலும் பொது வெளிகளிலும் ஆபாசப் பேச்சுக்கள் ஓர் அங்கத்தைப் போலவே தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஆபாசப் பேச்சுக்களை 1960-களுக்கு முன்பிருந்தே மாநிலக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பேசி வந்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் கொச்சையாக தாக்குவதும் தமிழக அரசியலில் தொடர்ந்து நடந்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த  காமராஜரின் நிறத்தைக் குறிப்பிட்டு அவரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். சில மேடைகளில் காங்கிரஸ் தலைவர்கள் அத்துமீறி கொச்சையாக மற்றவர்களைத் திட்டிப் […]