ஆதவ் அர்ஜுனா பேசும் புதுக் கூட்டணி முடிச்சு!
செய்தி: பாஜக துணையுடன் திமுக அதிமுக இணைந்து விரைவில் கூட்டணி அமைக்கும்! – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே சிலர் சொல்லி வந்ததைத்தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். எப்படியோ அதிமுக, திமுக கூட்டணியுடன் பாஜகவையும் இணைத்து மெகா கூட்டணியை அமைக்கிற முயற்சியில் அனைவரும் சேர்ந்து உருவாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.
திமுக குறித்து சண்முகத்தின் குற்றச்சாட்டு!
செய்தி: ஆட்சி அதிகாரம் இல்லாததை திமுகவால் ஏற்க முடியவில்லை! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம். கோவிந்த் கமெண்ட்: திமுக கூட்டணியில் இருந்தவரை திமுக குறித்து பெரிதாக விமர்சனம் செய்யாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தற்போது தவெக ஆட்சி ஆதரவு கொடுப்பவராக மாறிய பிறகு புதுசு புதுசாக திமுக குறித்து பல விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அப்படித்தான் தற்போது அவர் சொல்வதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
‘மாண்புமிகு’க்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை!
தமிழக தேர்தல் முடிந்து பதவி ஏற்பு விழா நடந்தது. இது ஓர் உணர்வுபூர்வமான காத்திரமான செயல்பாடு.
இந்த நிகழ்வில் ஒவ்வொரு உறுப்பினரையும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள அழைத்தபோது “மாண்புமிகு” என்றுதான் அழைத்தனர்.
டி.ஆர்.பாலு வாபஸ் வாங்கியது ஏன்?
செய்தி: திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து முன்னாள் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை ‘திமுக ஃபைல்ஸ்’ வெளியிட்டதற்கு எதிராக மான நஷ்ட வழக்கை தொடர்ந்திருந்தார் முன்னாள் அமைச்சரான டி.ஆர்.பாலு. அதற்கான விசாரணையும் நடந்த நிலையில் தற்போது அந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார் டி.ஆர்.பாலு. கோவிந்த் கமெண்ட்: தற்போது அந்த வழக்கை, வாபஸ் பெற்றிருப்பதன் மூலம் எதைச் சொல்ல முனைகிறார் டி.ஆர்.பாலு. அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக டி.ஆர்.பாலு அன்று ஏன் வழக்குத் […]
முதல்வர் விஜய்யின் சரியான அறிவுறுத்தல்!
செய்தி: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை; சட்டம் ஒழுங்கில் சுதந்திரமாக செயல்படுங்கள்! – ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: தேர்தலுக்கு முன்பு எந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சனை தீவிரமாகப் பேசப்பட்டதோ, அதே பிரச்சனை முதல்வர் விஜய் பதவிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளேயே எழுப்பப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை சட்டசபையிலும், பொதுவெளியிலும் முன்வைத்து வரும் நிலையில், அதிகாரிகளுக்கான கூட்டத்தில் முதல்வர் விஜய் வெளிப்படையாக இப்படி வலியுறுத்தியிருப்பது ஆரோக்கியமான […]
மாறும் கூட்டணி பேரங்கள்!
இதுவரை நடந்த தேர்தல்களில் எப்படிப்பட்ட கூட்டணிகள் அமைந்ததோ இல்லையோ, இனிவரும் தேர்தல் அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி என்ன மாதிரியான கூட்டணி அமையப்போகிறது என்பதில், சில குழப்பங்கள் நீடிக்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக கூடுதல் எண்ணிக்கையுடன் ஜெயித்த பிறகு பல கூட்டணிகளிலிருந்து கூட்டணிக் கட்சிகள் ஸ்பேர் ஸ்பார்ட்சை போல கழற ஆரம்பித்துவிட்டன. திமுக கூட்டணியிலிருந்து பொதுவுடமைக் கட்சிகள் முதலில் இடம்பெயர்ந்து தவெகவிற்கு ஆதரவளித்தன. தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக், […]