பேட்டிகள்

இன்றைய தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?

தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். ‘குருதிப் புனல்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.  ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். இவருடைய பெரும்பாலான நாவல்கள் உயர், நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர […]

அழகும் அழுக்கும் நிறைந்த உலகம் இது!

நான் எழுதிய முதற்கதையும் சரி, இனிமேல் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே இருக்கும். கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியை வாசகர்கள் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைகளாகவே இருக்கும். ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம், மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள். இவைதான் என் கதைகளின் கருத்து நிலை என்றும் சொல்லலாம். – எழுத்தாளர் அகிலன்.

எழுத்தென்பது மௌனத்திற்கு எதிரான கலகம்!

தனது நாவலில் பண்டிட் பியாரி லால் எனும் கதாபாத்திரம் ஒன்று தனது பழத்தோட்டத்தில் இறந்து போகிற காட்சியை எழுதுகிறபோது சல்மான் ருஷ்டியினால் அதைத் தாங்கவே முடியவில்லை.

மேஜையில் அமர்ந்து அழத் தொடங்கி விட்டார்.

எழுதித் தீர்க்க முடியாதவை இன்னும் மனதில் இருக்கின்றன!

ஒன்றிய அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்தி, நமக்கென்றொரு சாகித்திய அகாடமியை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

மனிதர்களை ஜனநாயகப்படுத்தும் புத்தகங்கள்!

ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் உள்ளிட்ட தமிழின் முதன்மையான படைப்பாளிகள் அனைவரும் பட்டினியின் குரூரத்தை எழுதியிருக்கிறார்கள்.

தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!

உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்த தமிழின் அகராதி வளங்கள் தற்போது எட்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இணையத்தில் தமிழை மேம்பட்ட சொற்பதிவுகள் கொண்ட முதல்மொழியாக மாற்றும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.