பிரபலங்களின் நேர்காணல்கள்

தனிமனிதத் துதியை நிறுத்துவார்களா?

செய்தி:    தனிமனிதத் துதி பாடலைத் தவிர்க்க வேண்டும்! – பிரேமலதா விஜயகாந்த் கருத்து. கோவிந்த் கமெண்ட்:  தற்போதைய தேமுதிக தலைமைப் பொறுப்பிலிருக்கும் பிரேமலதா நல்லவேளை இதற்கு முந்திய ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் உறுப்பினராக அமரவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், துதி பாடிகள் எந்த அளவுக்கு ஒருவரை நனைய வைப்பார்கள் என்பது நன்றாகப் புலப்பட்டிருக்கும். ஒரே ஒரு கேள்வி. தேமுதிகவில் அப்படிப்பட்ட தனிமனித துதிகள் அனுமதிக்கப்படுகிறதா? இல்லையா? 

அண்ணாமலையின் ‘வெள்ளை’ அறிவுறுத்தல்!

செய்தி:    வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, தவெக அரசு செயல்படாமல் இருக்கக்கூடாது! – அண்ணாமலை அறிவுறுத்தல். கோவிந்த் கமெண்ட்:  புதிதாக இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கிற அண்ணாமலை, தவெக வெள்ளை அறிக்கை வெளியிட்டது குறித்துப் பாராட்டுத் தெரிவிக்கிறாரா அல்லது கண்டனத்தைத் தெரிவிக்கிறாரா?

குற்றமும் தண்டனையும்…!

செய்தி:    குற்றம் செய்தால் தண்டனை என்ற உணர்வு சமூகத்தில் வளர வேண்டும்! – டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கைரேகை மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை. கோவிந்த் கமெண்ட்:  உள்துறை அமைச்சரான அமித்ஷா அவர் அளவில் தோன்றிய கருத்தை முன்வைத்திருக்கிறார். ஆனால், எத்தனையோ குற்றங்கள் நடந்தாலும், அந்தக் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை உரிய காலத்தில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகிறதா? குற்றத்திற்கும் தண்டனைக்குமான நீண்டகால இடைவெளி அமலில் இருக்கும்போது, அந்த காலதாமதத்தை எப்படி எடுத்துக்கொள்வது?

ட்ரம்பின் லேட்டஸ்ட் துதி!

செய்தி:    பிரதமர் நரேந்திர மோடி நெஞ்சுரம் கொண்டவர்! – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம். கோவிந்த் கமெண்ட்:  டிரம்ப் இதற்கு முன்பு இந்தியா உள்ளிட்ட பலநாட்டு தலைவர்கள் மீது வசைப்படியிருக்கிறார். எப்போதாவது புகழவும் செய்திருக்கிறார். தற்போது பிரதமர் மோடியை ஆதரித்து புகழ் பாடியிருக்கிறார். ட்ரம்ப்-ஆல் புகழப்படும் போதுதான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

முதல்வரால் ஏற்கப்பட்ட எதிர்கட்சித் தலைவரின் யோசனை!

செய்தி:    திமுக சார்பில் தனி தீர்மானத்துக்கு ஆதரவளிக்கிறோம்; மேகதாது தீர்மானத்தை எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் குழுவாகச் சென்று மத்திய அரசிடம் வழங்கலாம்! – எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் யோசனை. கோவிந்த் கமெண்ட்:  முதலில் தவெக ஆட்சிக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுப்பதாக அறிவித்துவிட்டு, பிறகு இரண்டு வாரங்களிலிலேயே சரமாரியான தாக்குதல்களை துவக்கிவிட்டது திமுக. ஆனாலும், தற்போது மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் இப்படியொரு யோசனையை முன்வைத்து, அதைப் பாரபட்சம் காட்டாமல் தமிழக முதல்வர் விஜய்யும் ஏற்று, […]

பொதுவுடமைக் கட்சியின் வாக்குமூலம்!

செய்தி:    தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்துள்ளோம். – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பரபரப்பு கருத்து. கோவிந்த் கமெண்ட்:  ஆட்சிக் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆதரித்தோம் என்று முதலில் ஒரு காரணத்தைச் சொன்னது மார்க்சிஸ்ட் கட்சி. இந்நிலையில், இப்படி ஒரு காரணத்தை தற்போது சொல்லியிருக்கிறது அதே மார்க்சிஸ்ட் கட்சி. அவர்களுடைய மொழியிலேயே சொன்னால், அடிக்கடி தன்னை சுய […]