மேகதாது அணை – கர்நாடக முதல்வரின் அறிவிப்பு!
செய்தி: மேகதாது அணைத் திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசத் தயார்! – கர்நாடக முதர்வர் டி.கே.சிவகுமார் கோவிந்த் கமெண்ட்: இதே மேகதாது அணை கட்டுவது பற்றி கர்நாடகத்திலிருந்த எத்தனையோ முதர்வர்கள் தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். அதை எதிர்த்து தமிழ்நாட்டில், முதலமைச்சராக பொறுப்பிலிருந்தவர்கள் இதுவரை தொடர்ந்து எதிர்த்திருக்கிறார்கள். இப்போது கர்நாடக முதல்வரான டி.கே.சிவகுமார் தமிழக முதல்வரான விஜய்யிடம் புதிதாக என்ன பேசிவிடப் போகிறார்?
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்று தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது அடிப்படையான தேவை. இந்தத் தேவை தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தேவை.
இளைஞர்களுக்கு வலுவூட்டுவது யார்?
செய்தி: வலுவூட்டப்பட்ட இளைஞர்களே வளர்ச்சியடைந்த பாரதத்தின் உந்து சக்தி. – நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு கோவிந்த் கமெண்ட்: வலுவான இளைஞர்களின் மூலம் பிரதமர் மோடி சொல்வது மாதிரி இந்தியா வலுவாக மாறலாம் தான். ஆனால், இளைஞர்களுக்கு வலுவூட்டுவது யார்? வேலையின்மையால் கோடிக்கணக்கான இளைஞர்கள் பரிதவிக்கும்போது, அவர்களுக்கு கரப்பான் பூச்சி என்கின்ற அடைமொழியைக் கொடுக்கிறார். அந்தக் கரப்பான் பூச்சிகள் வலுவாக ஒன்று சேர்ந்தால், அதற்கு தடைவிதிக்கிறார். மேற்காசியப் போரினால் மேலும் மேலும் வேலைகளை இழந்து […]
PMUY மானிய விலை சிலிண்டர் இனி 4 மட்டுமே!
மத்திய அரசு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கொடுக்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9-லிருந்து 4 ஆகக் குறைத்திருக்கிறது. குடும்பங்களின் சராசரி ஆண்டு எரிவாயு நுகர்வை அடிப்படையாகக் கொண்டு மானியச் செலவினத்தை சீரமைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இந்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை நாடு […]
அரசு மருத்துவமனையிலும் போலி மருத்துவர்கள்!
செய்தி: மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது! கோவிந்த் கமெண்ட்: பொதுவாக முறையாக படித்து பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் தனிக் கடை போடுவது மாதிரி தனியார் மருத்துவமனைகளைத்தான் துவக்குவார்கள் அல்லது அதில் பணிபுரிவார்கள். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே போலி மருத்துவர்கள் புகுந்துவிட்டார்கள் என்றால், எவ்வளவு கிருமிகள் மயமாக மாறிக் கொண்டிருக்கிறது மருத்துவத்துறை.
ஹிட்லரை முன்மாதிரியாகச் சொல்லும் ஒரு முதல்வர்!
செய்தி: ஹிட்லரிடமிருந்து உத்வேகம் பெற்றேன்! – தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கருத்தால் சர்ச்சை! கோவிந்த் கமெண்ட்: இதுவரை இந்தியாவின் பல மாநிலங்களில் காந்தி, நேதாஜி, பட்டேல் என்று பலரை மும்மாதியாகச் சொல்வார்கள். ஆனால், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிட்லர் தனக்கு உத்வேகம் கொடுத்ததாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். பலர் ஹிட்லர் தனத்தை வெளிப்படையாக செயல்படுத்தினாலும், இவரைப் போல் வெளிப்படையாகச் சொல்லுவதில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.