டிரம்பின் ஆபத்தான எச்சரிக்கை!
செய்தி: ஹார்மூஸ் நீரிணையில் ஈரானியப் படகுகளை சுட்டு வீழ்த்துங்கள்! – அமெரிக்கப் படைகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே, ஹார்மூஸ் நீரிணையில் அண்மையில் இரண்டு இந்திய எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலினால், உண்டான விளைவை ஏற்கனவே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம்மூர் ஆட்டோ ஓட்டுநர்கள் வரை இந்தப் பற்றாக்குறை எதிரொலிக்கிற நிலையில், மேற்கொண்டு போரில் தீப்பந்தத்தைப் பற்ற வைக்கிற மாதிரி அமைந்திருக்கிறது ட்ரம்பின் பேச்சு.
ஐ.நா. சுட்டிக்காட்டும் பொருளாதார வளர்ச்சி!
செய்தி: இந்தியப் பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சியை எட்டும்! ஐ.நா அறிக்கையில் தகவல் கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்த நிலையிலும், பல நாடுகள் கச்சா எண்ணெய்க்காக தவித்துவரும் நிலையிலும் கூட ஈரான் அண்மையில், இரு எண்ணெய் தாங்கிவந்த இந்தியக் கப்பல்களைத் தாக்கியபோதும் கூட இதுவரை சமாளித்து வந்திருக்கிற இந்திய அரசு பொருளாதார வளர்ச்சியையும் தக்க வைத்திருப்பதை ஐ.நா சுட்டிக் காட்டியிருப்பது பொருத்தமானதுதான்.
போர் என்பது புலி மீது சவாரி செய்வதுதான்!
‘ரோமானியர்களுக்கு எதிராக இன்னும் ஒரேயொரு போரில் நாம் வெற்றி பெற்று விட்டால் அதுபோதும் நாம் அழிவதற்கு’ என்றார் எபிரஸ் நாட்டின் மன்னர் பீர்ரஸ்.
பத்தாயிரம் கோடி ரூபாய் + அழகான பெண்!
உகாண்டா என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வருவது இடி அமீன். அவர் 1979-இல் புரட்சி மூலம் விரட்டியடிக்கப்பட்டார்.
அவரை விரட்டியடித்த பல ராணுவக் குழுக்களுள், இந்த யோவேரி உருவாக்கிய குழுவும் ஒன்று.
ஒருபுறம் போர் நிறுத்த அறிவிப்பு: மறுபுறம் எல்லை மீறி நடக்கும் சண்டை!
செய்தி: இஸ்ரேல் – லெபனான் இடையே மீண்டும் போர்: இஸ்முல்லா அமைப்பின் தனிச் செயலாளர் உட்பட 250 பேர் பலி. கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்து பலதரப்பட்ட நெருக்கடிகளை ஈரான் மட்டுமல்ல பல நாடுகள் சந்தித்து வருகின்றன. இதனால்தான், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் தற்போது அந்தக் குறைந்தபட்ச ஒப்பந்தத்தையும் மீறி இத்தகைய தாக்குதல் நடத்துவது போருக்கான குறைந்தபட்ச நெறிகள் கூட மீறப்பட்டிருப்பதையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா!
செய்தி: ஈரானிடமிருந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கியது இந்தியா! கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் முற்றி வரும் நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான பற்றாக்குறை அதிகரித்து, விலையேற்றமும் அதிகரித்து, பல்வேறு பொருளாதார திண்டாட்டங்களை பல நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் தருவித்திருக்கிறது இந்திய அரசு. ஆனால், கச்சா எண்ணெயை நமது தேவைக்கு நாம் வாங்குகையில் இடையில் ஏன் இந்த 7 ஆண்டுகளுக்கு மேலான […]