உலகச் செய்திகள்

அமெரிக்காவில் லஞ்சத்திற்கு எதிரான நிலைப்பாடு!

செய்தி: இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்; ரூபாய் 57 கோடி அபராதம் செலுத்த அதானி சம்மதம். – வழக்கை கைவிட அமெரிக்க அரசு முடிவு. கோவிந்த் கமெண்ட்: அமெரிக்காவிலாவது லஞ்சம் வாங்கியது நிரூபணமாகி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இதேவிதமான லஞ்சம் வாங்குவது வெளிப்படையாக தெரிந்தும்கூட என்ன நடந்திருக்கிறது? யார் இம்மாதிரி இங்கு அபராதத்தைச் செலுத்தத் தயாராக இருப்பார்கள்?

குண்டு வீசினபிறகுதான் தெளிவு பிறக்குமா?

செய்தி: ஹார்மூஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். – ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி உறுதி.  கோவிந்த் கமெண்ட்: இன்றைக்கு இப்படி பேசும் ஈரான், மிக அண்மையில்தான் இதைக் கடக்க முயன்ற இந்திய எண்ணெய்க் கப்பலை குண்டு வீசி தாக்கி இருக்கிறது, அந்தக் கப்பலும் பலத்த சேதம் அடைந்திருக்கிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிற நிலையில், மிகவும் தாமதமாக ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. போரின் போது பல செயல்பாடுகள் தாமதமாகத்தான் நடக்கின்றன.

எப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஐ.நா.?

செய்தி: ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே உலக அளவில் பலவிதமான போர்களும், பெரும் இன அழிப்பும் நடந்து கொண்டிருந்தபோது ஐநா மன்றம் என்ன செய்தது? ரஷ்யா, உக்ரைன் போராகட்டும் தற்போது நீடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா – ஈரான் மேற்காசியப் போராகட்டும், அதை வலிமையோடு தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியை ஐ.நா. மன்றம் ஏன் செய்யவில்லை? இந்த நிலையில், அதில் சீர்திருத்தம் வேண்டும் என்கின்ற இந்தியாவின் கோரிக்கை மனதார வரவேற்க வேண்டியதா?

மக்கள் எவ்வளவு சுமையைத்தான் தாங்குவார்கள்?

செய்தி: இந்தியக் கப்பல் மீது ஈரான் பயங்கர தாக்குதல், ஓமன் கடற்பகுதியில் மூழ்கடிப்பு: மத்திய அரசு கடும் கண்டனம். கோவிந்த் கமெண்ட்: கடந்த 2 மாதங்களுக்குமேல் நீடித்துவரும் மேற்காசியப் போர் வரவர முற்றிக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே, இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் வழிவிட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது நிலைமை முற்றி இந்திய எண்ணெய்க் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் நிலை வரை வந்திருக்கிறது. மிக அண்மையில் தான் பிரதமர் மோடி எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும், கொரோனோ காலத்திய நிலை மாதிரி […]

எத்தனை தடவை மிரட்டுவார் டிரம்ப்?

செய்தி: அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் ஈரான் வேதனைப்பட வேண்டி இருக்கும். – அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் கோவிந்த் கமெண்ட்: இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்தே தொடர்ந்து மிரட்டிக் கொண்டு வருகிறார் டிரம்ப். இடையிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும் கூட, இன்னமும் தொடர்ந்து மிரட்டும் நிலையிலேயே இருக்கிறார் டிரம்ப். ஆனால், அவர் இதுமாதிரியான நிலையிலிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அமெரிக்கா மட்டுமல்ல, பல உலக நாடுகள் பல்வேறு விதத்தில் தொடர்ந்து அவதிப்பட வேண்டியிருக்கும் என்பதே […]

வரவேற்கத்தக்கத் தீர்ப்பு!

செய்தி: இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த 10 சதவீத வரி ரத்து. – அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே பல உலக நாடுகள் விஷயத்தில் தாறுமாறான வரியைத் தீர்மானித்து வந்த ட்ரம்புக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில், தற்போது மீதம் இருந்த 10 சதவீத வரியும் விலக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலிருந்து பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி பண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்லதொரு […]