உலகச் செய்திகள்

முதல் முறையாக வாக்களித்த பழங்குடியினர்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தேறிய நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் வாக்களித்துள்ளனர்.

மலையகத் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்!

இந்திய அரசு ஒப்பந்தம் போட்டு குடியுரிமை கொடுத்து முழுமையாக மறுவாழ்வு கொடுப்போம் என உறுதியளித்து கூட்டி வரப்பட்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களுக்கு முறையாக மறுவாழ்வு கிடைக்காததால் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!

“விடுதலை உணர்ச்சி மிக்‍க ஐக்‍கிய அமெரிக்‍காவை பாதுகாப்பதற்காகவே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவநிலையில் படைக்‍கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்‍களுக்‍காக அரசாங்கம், மக்‍களுடைய அரசாங்கம், மக்‍களால் ஆளப்படும் அரசாங்கம் எனும் வாக்‍கு மொழிகள் அழிந்துபோகாது. மக்‍களால், மக்‍களுக்‍காக நடத்தப்படுவதே மக்‍களாட்சி” 1863ம் ஆண்டு தான் ஆற்றிய புகழ்பெற்ற கெட்டிச்பெர்க் (Gettysburg speech) பேருரையில், அப்போதைய அமெரிக்‍க அதிபர் ஆபிரகாம் லிங்கன், மக்‍களாட்சியின் மகத்துவம் குறித்து இவ்வாறு பேசினார். தனது ஆட்சியில் லிங்கன் […]

அபுதாபி இந்துக் கோயில் – சிறப்பம்சங்கள் என்ன?

அபுதாபியில் உள்ள ஆபு முரீகா என்ற இடத்தில் மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி திறந்து வைக்கிறார். இக்கோயிலின் முக்கிய அம்சங்கள்… இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்தும் முயற்சியாக அபு முரீகாவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்காக அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யான், 13.5 ஏக்கர் இடத்தை 2015-ம் ஆண்டில் வழங்கினார். 2017-ம் ஆண்டில் ஐக்கிய அமீரக […]

காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 3,55,000 பேர் பலி!

ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காற்று மாசுபாடுகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து லண்டனைச் சேர்ந்த கர்ன் வோஹ்ரா என்பவர் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் காற்று மாசுபாட்டினால் முன்கூட்டியே இறக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர் எனவும் தெற்காசியாவில் அகமதாபாத், பெங்களூர், சென்னை, சிட்டகாங், டாக்கா, ஹைதராபாத், கராச்சி, கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் சூரத் மற்றும் பாங்காக், ஹனோய், ஹோ சி மின் […]

உலகில் 3-ல் ஒரு பெண் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கிறார்!

– உலக சுகாதார அமைப்பு தகவல் உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதில் தென்கிழக்கு ஆசியப் பகுதியே உலகில் 2-ஆவது இடத்தில் இருப்பதாகவும், இந்தப் பகுதியில் 33 சதவிகிதப் பெண்கள் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கான இயக்குநர் டாக்டர் […]