செய்தி:
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் ஈரான் வேதனைப்பட வேண்டி இருக்கும்.
– அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
கோவிந்த் கமெண்ட்:
இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்தே தொடர்ந்து மிரட்டிக் கொண்டு வருகிறார் டிரம்ப்.
இடையிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும் கூட, இன்னமும் தொடர்ந்து மிரட்டும் நிலையிலேயே இருக்கிறார் டிரம்ப்.
ஆனால், அவர் இதுமாதிரியான நிலையிலிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அமெரிக்கா மட்டுமல்ல, பல உலக நாடுகள் பல்வேறு விதத்தில் தொடர்ந்து அவதிப்பட வேண்டியிருக்கும் என்பதே உண்மை.