எரிபொருள் நெருக்கடி: பிரதமர் என்ன சொல்கிறார்?

செய்தி:

மேற்காசிய போரால் எரிபொருள் நெருக்கடி!

– பிரதமர் மோடி அவசர ஆலோசனை.

கோவிந்த் கமெண்ட்:

ஏற்கனவே ஏதோ ஒரு விதத்தில், எரிபொருளுக்கான தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. அரசும் அதை ஒருவிதத்தில் சமாளித்து, சரிப்படுத்த முனைந்து கொண்டே இருக்கிறது.

ஆனாலும், தொடரும் மேற்காசிய போரினால், கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போகிறது.

போர் இன்னும் தீவிரமானால், கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு அதிகரித்து, விலையேற்றம் நடந்து பல பொருட்களின் விலை தாறுமாறாக ஏறலாம்.

எங்கோ போர் நடக்க இங்குள்ள சாமானியன் வரை உலகளாவிய அளவில், எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள்?!

Comments (0)
Add Comment