செய்தி:
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
– 111 நாட்கள் நீடித்த பதற்றம் முழுமையாக தணிந்தது.
கோவிந்த் கமெண்ட்:
நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் வரப்போவதன் முன் அறிகுறியாக ஈரானுடனான சமதான ஒப்பந்தத்திற்கு முன் வந்திருக்கிறார் அமெரிக்க அதிபரான டிரம்ப்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் இன்னும் இஸ்ரேல் மட்டும் முரண்டுபிடித்துக் கொண்டிருக்கிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தற்போது எரிபொருளுக்கான கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் இறங்கி இருக்கிறது.
ஆனால், இந்தியாவில் மட்டும் எரிபொருளின் விலையைக் குறைக்க முடியாது என்று அறிவித்திருக்கிறார் மத்திய இணை அமைச்சரான சுரேஷ் கோபி.
எவ்வளவு பொறுப்பான பதில்?