செய்தி:
திருச்சி ரயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் இந்தி வார்த்தைகள் அகற்றம்!
– முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் எதிர்ப்பு எதிரொலி.
கோவிந்த் கமெண்ட்:
இதே திருச்சியில்தான் மொழிப் போராட்டம் நடந்தபோது, இந்தி எழுத்துக்கள் தார்ப் பூசி அழிக்கப்பட்டன.
இந்தித் திணிப்புக்காகப் போராடி உயிரை மாய்த்துக் கொண்ட முதல் போராளியான நடராசனின் கல்லறை இருப்பதும் இதே திருச்சியில் தான்.
இப்போது வரலாற்றின் இன்னொரு பக்கத்தில், அதே திருச்சியில் இந்தி எழுத்துக்களை அழிப்பது தொடர்கிறது.
வரலாறு திரும்புகிறதா என்ன?