வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா,
வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா?
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா,
சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா?
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!
– கவியரசு கண்ணதாசன்
பி.கு : கர்மவீரர் காமராஜரைப்பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய கவிதை.
நிகழ்ச்சி ஒன்றில் பெருந்தலைவர் காமராஜரிடம் நினைவுப் பரிசை பெற்றுக்கொள்ளும் கவியரசர் கண்ணதாசன்.
– நன்றி: முகநூல் பதிவு