இப்படியும் ஒரு தலையாய நேர்த்திக் கடன்!

செய்தி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளேடுகள் காணிக்கை.

– நேர்த்திக் கடனை நிறைவேற்றிய ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பிளேடு தயாரிப்பு நிறுவனம்.  

கோவிந்த் கமெண்ட்:

திருப்பதிக்கு போய் மொட்டை போடுபவர்களின் தலைமுடி கூட விற்பனைப் பொருளாகிறபோது, மொட்டை போடுபவர்களுக்கு வசதியாக பிளேடுகளை காணிக்கையாக செலுத்தி இருக்கிறது இந்த நிறுவனம்.

உண்மையில் எவ்வளவு கூரான, வித்தியாசமான காணிக்கை.

பக்தர்கள் முடியைக் காணிக்கையாக தருகிறார்கள். அவர்களுக்காக பிளேடுகளைக் காணிக்கையாக தருவது எவ்வளவு தலையாய நேர்த்திக் கடன்.

கோவிந்தா… கோவிந்தா…!

 

Comments (0)
Add Comment