பாலசந்தர் கண்கலங்கிய தருணம்!
கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு – 4 தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ என்று அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் அவர்களை நான் முதலில் சந்தித்த அனுபவமே வித்தியாசமானது. அப்போது பெரும் சிக்கலான மனநிலையில் இருந்தார் பாலசந்தர். பிரபல நடிகரின் தந்தை, பாலசந்தரைப் பற்றி மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்த செய்திகள் அப்போது மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. மகனின் படம் ஒன்றை ‘பைரசி’ முறையில், பாலசந்தர் எடுத்துவெளியிட்டதாக கடுமையான புகார் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. மீடியாவில், அந்தப் […]
நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?
இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால், கோவையில் நடந்த விவசாயிகள் தொடர்பான மாநாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக விதைத்த முன்னோடி என்கிற வகையில் நம்மாழ்வாரின் பங்களிப்பு மகத்தானது. அவரைப் பற்றிய சில நினைவுத் துளிகள்: இயற்கை விவசாயத்தின் அடையாளச் சின்னம் போலவே மாறிவிட்ட நம்மாழ்வாரை, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தவர்களுக்கு தெரியும் அவரின் தற்போதைய தோற்றத்தில் அப்போது […]
எல்லாப் பிரச்சனைகளும் அதுக்கான தீர்வோடுதான் ஆரம்பிக்கும்!
தனது நகைச்சுவைப் பேச்சால் பட்டிதொட்டி முதல் ஃபாரின் வரை ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி, பட்டிமன்றம், பாட்டுமன்றம், அரசியல், பொதுக்கூட்டம் என எப்பொழுதும் தன்னை பொதுவெளியில் மிகுந்த ஈடுபாட்டுடன் வைத்திருப்பவர். ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் லியோனி மேடை, பேச்சாளர்கள், கூட்டம் இது மூன்றும் இல்லாமல் தன் ரசிகர்களை நேரடியாக சந்திக்க எண்ணி அதற்காக உருவாக்கியதுதான் ‘லியோனி டாக்கீஸ்’ என்ற யூ டியூப் சேனல். இந்த சேனல் மூலம் தன் ரசிகர்களை […]
என் பாடல்கள் இப்போதும் டிரெண்டிங்கில் இருப்பது மகிழ்ச்சியே!
தேனிசைத் தென்றல் தேவா பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் இருந்து ஒரு பகுதி. கேள்வி: தேவா என்றாலே கானா பாடல்கள் என்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. அந்த அடையாளம் உங்களுக்கு சரியாகப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா? பதில்: நான் இசையமைக்க வந்து பல ஆண்டுகள் கழித்துதான் கானா பாடல்களை உருவாக்கினேன். ஆனால், என்னை உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் கொண்டுபோனது கானா பாடல்கள்தான். அதேநேரம் என்னுடைய ‘மெலடி’ பாடல்களையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். ஆகவே இரண்டும் இரண்டு கண்களைப் போலத்தான். கானா […]
வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ரசிக்கணும்!
மதுரையில் நண்பர் திரு மு.ராமசாமியின் வீட்டில் தான் முதன்முதலாக திரு.கோவை ஞானியைச் சந்தித்தேன். வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும், நரைத்த தலையுமாய் இருந்தபோதும் முகமெல்லாம் அடிக்கடி சிரிப்பு வந்து நகரும் முகத்தோடு தான் இருந்தார். மு.ராமசாமி வீட்டிலிருந்து மதுரை டவுன் ஹால் ரோட்டிற்கு அருகிலுள்ள பிரபலமான ஒரு அசைவ ஓட்டலின் பெயரை ராமசாமி சொன்னதும், சிரிப்புப் பொங்க, “உடனே போகலாமே” என்றவர் போகிற வழி வரைக்கும் உற்சாகத்துடன் பேசிக் கொண்டே வந்தார். குறிப்பிட்ட அந்த ஓட்டலுக்குள் நுழைந்ததும் […]
வித்தியாசமான ‘கதை’யுடன் களமிறங்கிய ‘ஆர்யன்’!
விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, கருணாகரன், அவினாஷ் நடிப்பில், F.I.R படத்தை இயக்கிய மனு ஆனந்த் உடன் சேர்ந்து, திரைக்கதை எழுதி, பிரவீன் கே என்பவர் கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆர்யன். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் தயாரித்து இருக்கிறார்கள். மோசமான நடத்தைகள் கொண்டிருந்தாலும் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகன் ஒருவனை (யாரைச் சொல்றாங்க புரியுதா?) கிடுக்கிப்பிடி இன்டர்வியூ எடுத்துக் கிழிக்க, ஒரு […]