நேற்றைய நிழல்

மெல்லிசை மன்னரை உலுக்கிய மூன்று துயரங்கள்!

தமிழ்த் திரையுலகில் அழியாப் புகழ்பெற்ற பாடல்களைக் கொடுத்த கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் (MSV) ஆகியோரின் நட்பு, தொழில்முறைத் தொடர்பையும் தாண்டி ஒரு உன்னதமான பந்தமாக விளங்கியது. கண்ணதாசனின் கடைசி நிமிடங்களில் நடந்த சில நெகிழ்ச்சியான நினைவலைகளை எம்.எஸ்.வி பேட்டி ஒன்றில் பகிர்ந்தவை இதோ: எம்.ஜி.ஆர் விடுத்த அவசர அழைப்பு: கவிஞர் கண்ணதாசன் உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் நினைவு தப்பிய நிலையிலும் எம்.எஸ்.வி-யுடன் இணைந்து மெட்டுப் போடுவது போலவும், […]

நாகேஷுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்!?

தமிழின் தனித்துவமான நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் இயக்குநரும் நடிகருமான விசு எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி : விசு கேள்வி : உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்? நாகேஷ் பதில் : நகைச்சுவை நடிகரா? நடிகர்கள்னு கேளுங்க. கேள்வி : ஏன் நிறைய பேர் உங்களுக்கு பிடிக்குமா? யாரெல்லாம் பிடிக்கும்?  நாகேஷ் பதில் : எல்லா அரசியல்வாதிகளுமே நடிகர்கள் தான்… கேள்வி : உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகை? நாகேஷ் பதில்: நகைச்சுவை நடிகை என் பேத்தி. […]

பூமணி: கரிசல் மண்ணை நேசித்த எழுத்துக் கலைஞர்!

இறுதிவரை, சக மனிதர்களிடம் இயல்பான அன்பை வெளிப்படுத்தக் கூடியவராகவே இருந்தார் பூமணி.

கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்!

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரருமான இரட்டைமலை சீனிவாசன், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற கிரமத்தில், 1859ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பிறந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரது குடும்பம் சாதியக் கொடுமைகளாலும், குடும்ப வறுமையினாலும் தஞ்சைக்கும், பின்னர் கோவைக்கும் இடம்பெயர்ந்தது. தஞ்சையில் பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்த சீனிவாசன், கல்லூரிப் படிப்பைக் கோவையில் முடித்தார். 1887ஆம் ஆண்டில் ரெங்கநாயகி […]

கர்மவீரரைப் பற்றி கவியரசர்…!

வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா,வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா?சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா,சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா?படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!– கவியரசு கண்ணதாசன் பி.கு : கர்மவீரர் காமராஜரைப்பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய கவிதை. நிகழ்ச்சி ஒன்றில் பெருந்தலைவர் காமராஜரிடம் நினைவுப் பரிசை பெற்றுக்கொள்ளும் கவியரசர் கண்ணதாசன். – நன்றி: முகநூல் பதிவு

மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்ற கவிஞர்!

“பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே உறவுக்கு உயிர் தந்தாயே… நானே எனக்கு நண்பன் இல்லையே உன்னால் ஒரு சொந்தம் வந்ததே…” வழக்கமாக திரைப்படங்களில் இடம்பெறும் சராசரி வரிகளை விட உயரம் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான நா.காமராசர். 1984-களில் ரஜனி நடிப்பில் வெளிவந்த ’நல்லவனுக்கு நல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே” என்று துவங்கும் இந்த திரையிசைப் பாடல் இடம்பெற்ற சில வரிகள் […]