நூல் அறிமுகம்:
– யூமா வாசுகி
ராஜமார்த்தாண்டன் (1948) அ. ராஜமார்த்தாண்டன் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் முனைவர் பட்டத்துக்காக மூன்றாண்டுகளுக்குமேல் புதுக்கவிதையில் ஆய்வு செய்தார்.
1976 – 1983 வரை ‘கொல்லிப்பாவை’ இலக்கியக் காலாண்டிதழை (12 இதழ்கள்) ஆசிரியராக இருந்து நடத்தினார்.
‘தினமணி’ நாளிதழின் ஆசிரியர் குழுவில் இருபது ஆண்டுகள் பணியாற்றினார்.
கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ‘புதுமைப்பித்தனும் கயிற்றரவும்’ (2000), ‘ராஜ மார்த்தாண்டன் கவிதைகள்’ (2002), ‘புதுக்கவிதை வரலாறு’ (2003) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
‘கொங்குதேர் வாழ்க்கை-2’ (நவீன கவிதைகளின் தொகுப்பு) உள்பட சில நூல்களையும் தொகுத்துள்ளார்.
இவரது நூல்கள்
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்)
என் கவிதை (கவிதைகள்)
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு)
கொங்குதேர் வாழ்க்கை
கொங்குதேர் வாழ்க்கை தொகுதி இரண்டு
கொங்குதேர் வாழ்க்கை – 3 (தொகுப்பு, தமிழினி)
புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி)
புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி)
***********
நூல்: ராஜமார்த்தாண்டன் கவிதைகள்
ஆசிரியர்: ராஜமார்த்தாண்டன் ()
குலுங்கா நடையான்
விலை: ரூ. 238/-