செய்தி:
அ.தி.மு.க., அ.ம.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவிக் கொடுத்தால், சிபிஐ விசாரணைக் கோருவோம்.
– டிடிவி தினகரன்
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே வாக்கு எண்ணிக்கைக்காக தவெக சற்று திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில், மன்னார்குடியில் ஜெயித்த ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை வைத்துக்கொண்டு மீடியாக்களுக்கு முன்னால் டிடிவி காண்பித்த ஆட்டமெல்லாம், அதே உறுப்பினரை கட்சியைவிட்டு விலக்கியதோடு முடிந்துபோய்விட்டது.
இனி அவர்களுக்கு அமைச்சர் பதவிக் கொடுப்பதோ, கொடுக்காமல் இருப்பதோ ஆளும் தவெக கட்சித் தலைமையின் விருப்பம்.
அதற்காக டிடிவி தினகரன் வருத்தப்பட வேண்டியதில்லை.