செய்தி:
ராமேசுவரம் கோவிலில் இலவச லட்டு வழங்கியதில் மூன்றரை கோடி ரூபாய் மோசடி.
– 6 பேர் பணியிடை நீக்கம்; பக்தர்கள் அதிர்ச்சி!
கோவிந்த் கமெண்ட்:
திருப்பதியைத் தொடர்ந்து ராமேஸ்வரத்திலும் பிரச்சனையாகும் லட்டு!
ஏற்கனவே திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் கலப்படம் இருந்ததாகச் சொல்லப்பட்டு, அது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
தற்போது ராமேஸ்வரம் கோவிலில் வழங்கப்படும் லட்டுவிலும் மோசடி நடந்திருக்கிறது.
பிரசாதமாக வழங்கப்படும் லட்டு குறித்த இத்தகைய புகார்களுக்கும் மோசடிகளுக்கும் சாட்சாத் அந்த கடவுள்தான் பதில் சொல்ல வேண்டும்.