தேர்தல் முடிவை நிர்ணயிக்கப்போகும் இளம் வாக்காளர்கள்!

செய்தி:

தீர்மானிக்கும் சக்தியாகும் இளம் வாக்காளர்கள்!

– தமிழ்நாட்டின் 5.67 கோடி வாக்காளர்களில் 20.72 சதவீதம் பேர் 29 வயதுக்கு உட்பட்டவர்கள்.

கோவிந்த் கமெண்ட்:

மொத்த வாக்களர்களில் ஏறத்தாழ 20 சதவீதம் பேர் இளைஞர்கள் மற்றும் புதிதாக வாக்களிக்க இருக்கும் இளம் தலைமுறையினர்.

இவர்கள் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கிற பல்வேறு கருத்துக் கணிப்புகள் ஒரு குழப்பமான முடிவையே முன் வைத்திருக்கின்றன.

ஆனால், இதே இளம் வாக்காளர்கள் மிகத்தெளிவான ஒரு முடிவை வரும் 23-ம் தேதியன்று அளிப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Comments (0)
Add Comment