அருமை நிழல்:
ராமாவரத்தில் உள்ள தனது வீட்டிலும் வேறு சில பொது இடங்களிலும் வாய்ப்புக் கிடைக்கும்போது, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
பாய்ஸ் கம்பெனி காலத்திலிருந்தே அவருக்கிருந்த பழக்கத்தை பிரபலமான பிறகும் அவர் மாற்றவில்லை.
விருந்தினர்கள் வரும்போது மட்டும் அவர்களுக்காக டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
நடிகர் நாகேஷ் மற்றும் அவரது மனைவியுடன் தரையில் சம்மணமிட்டு எம்ஜிஆரும், ஜானகி அம்மையாரும் இணைந்து சாப்பிட்டபோது எடுத்த அரிய புகைப்படம்.