நேரு – குழந்தைகளுடன் குழந்தையாக…!

ஜவஹர்லால் நேரு பிரதமராக  இருந்தபோது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.
 
இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
 
நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார்.
 
குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.
 
உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது.
 
குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.


குறிப்பு: குழந்தைகளுடன் குழந்தையாய் நேரு கொஞ்சி விளையாடியபோது எடுக்கப்பட்ட எழில் புகைப்படம்.

#நேரு #ஜவஹர்லால்நேரு #குழந்தைகள் #இளைஞர்கள் #கல்வி #மாணவர்கள் #இந்தியவரலாறு #சிறார்கள்தினம் #கல்வியின்முக்கியம் #எதிர்காலஇளைஞர்கள் #தமிழ்கல்வி #அறிவியல் #புத்தகவாசிப்பு #மாணவர்வாழ்க்கை #கனவுகள்இளைஞர்கள் #நாட்டின்எதிர்காலம் #JawaharlalNehru #Nehru #Education #Kids #Children #Teenagers #Students #ChildrensDay #Youth #Learning #IndianHistory #FutureGeneration #Knowledge #StudentLife

Comments (0)
Add Comment