ஜம்மு காஷ்மீர் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக…!

ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன.

அச்சுறுத்தல் இருந்ததால் ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுத் தொடங்கிய நிலையில் பிற்பகல் வரை 41 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதன் பிறகு மாலையில் படிப்படியாக வாக்கு சதவீதம் அதிகரித்தது. இரவு 8 மணி நிலவரப்படி ஜம்மு – காஷ்மீரில் 61 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கிஷ்துவார் தொகுதியில் 77.23 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக புல்வாமா தொகுதியில் 43.87 சதவீத வாக்குகளும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்கள் உட்பட மொத்தம் 219 வேட்பாளா்கள் போட்டியிட்டனர். தோ்தலுக்காக 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 14,000-க்கும் மேற்பட்ட தோ்தல் பணியாளா்கள் தோ்தலை நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி வைத்து களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment