ஏமாத்துற கூட்டம் எடுக்கணும் ஓட்டம்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

விஷயம் ஒன்னு சொல்லப்போறேன் கேளடி கேளு
உண்மை வெளியாகும் நேரம் வந்தது கேளடி கேளு

நடந்தது எல்லாம் தேவையில்லை தள்ளடி தள்ளு
இனி நடக்கபோற சங்கதியத்தான் சொல்லடி சொல்லு

வறுமையில்லே வாட்டமில்லே 
வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே

கொடுமையெல்லாம் மாறி வருகுது கேளடி கேளு
குடிசையைத்தான் இன்பம் நாடி வருது கேளடி கேளு

நல்லவர் போல உலகம் மீது
நரியும் கழுகும் உலவும்போது
நம்மை இன்பம் நாடி வருமா சொல்லடி சொல்லு
நிம்மதியா உலகம் வாழ விடுமா சொல்லடி சொல்லு

நடந்தது எல்லாம் தேவை இல்லை தள்ளடி தள்ளு
இனி நடக்க போற சங்கதியதான் சொல்லடி சொல்லு

ஏமாத்தும் போர்வையிலே
ஏழைகளின் வேர்வையிலே
எக்காலம் போடுற கூட்டம் நாட்டில்  – மக்கள்
எதித்துக் கிட்டா எடுக்கணும் ஓட்டம்

                                                            (விஷயம்…) 

– 1960-ம் ஆண்டு ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

30.01.2021 01 : 08 P.M

Comments (0)
Add Comment