எது போலி, எது அசல்?
தமிழ்ப் பட உலகில் தாம் பெரிய நகைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில்கூட நினைத்ததில்லை. பத்து வருடங்களுக்கு முன்னால் மாம்பலம் ‘கிளப் ஹவுஸ்’ விடுதியில் படுக்க இடமின்றி ‘மொபைல் நாகேஷாக’த் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் ஒருநாள் பங்களா வாசமும் கார் சவாரியும் கிடைக்கும் என்று அவர் கற்பனைகூட செய்து பார்த்தது கிடையாது. ஏன், அவர் ஒரு காமெடியன் ஆக வேண்டும் என்று கூட முயற்சி செய்யவில்லை. “காரியாலய நாடகங்களிலும் அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள்; […]
ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?
வாசிப்பின் ருசி: கேள்வி: “தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?” மணாவின் பதில்: “மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல் சூழலைக் கடந்த காலத்திலிருந்து பார்த்தால் துவக்கத்தில் சில ஆரோக்கியமான எதிர்வினைகள் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடியும். சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு முன்பு பாரதி தமிழ்ப் பத்திரிகை உலகில் இயங்கிய விதம் இன்றுள்ள […]
சாதுக்களின் வேடத்தில் சரிந்த சாம்ராஜ்யங்கள்!
‘நச்’ திரைப்பட மொழி: “சாதுக்கள் வேடத்திலே தான் பல சாம்ராஜ்யங்கள் சரிந்திருக்கின்றன” “பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்”. “பொன்னும், மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே முத்தே தமிழ்ப் பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே வீரனே! என் விழி நிறைந்தவனே! என்று யாரைச் சீராட்டிப் பாராட்டினீர்களோ, அவனை, அந்த மனோகரனைச் சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி, சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்னும் உங்களது தணியாத ஆசைக்குப் பெயர் […]
கரை சேர்ந்ததா ‘கர’?
தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், மமிதா பைஜு, கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, பிரிதிவி ராஜ் நடிப்பில்…
சினிமாத் துறையில் இருக்கும் அற்புதமான மனிதர்கள்!
எஸ்.வி.ரங்காராவ் உருவத்திலும் சரி, நடிப்பிலும் சரி கம்பீரமான நடிகர். அவருடன் சில படங்களில் மட்டுமே நான் நடித்திருக்கிறேன்.
கண்ணுக்குத் தெரியாத திரை போலத்தான் ஜாதி!
கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா Sebastian & Sons என்ற பெயரில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம், அதை எழுதுவதற்கான நோக்கம், மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான சிக்கலான உறவு, கர்நாடக இசை உலகில் நிலவும் ஜாதிப் பாகுபாடு ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் டி.எம். கிருஷ்ணா. அந்தப் பேட்டியிலிருந்து: மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்த இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான காரணம் […]