செய்தி:
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 9 போலீசாரும் குற்றவாளிகள்!
- மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கோவிந்த் கமெண்ட்:
அதிமுக ஆட்சியில், அதுவும் கொரோனா காலகட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொலை வழக்கு, இவ்வளவு காலம் கழித்துத் தீர்ப்பு வெளியாகி, இதில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நிரூபணமாகியிருப்பது சட்டரீதியான சரியான எதிர்வினைதான்.
ஆனால், அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியின் வழக்கமான குரலாக, இதே கொலை வழக்கைப் பற்றி என்ன சொன்னார் என்பதை மட்டும் நினைவுள்ளவர்கள் ரீவைண்ட் செய்து பார்க்கட்டும்.