படித்ததில் ரசித்தது:
ஏதாவது ஒன்றன் மீது பற்று இல்லாமல் எந்த உயிரினமும் இவ்வுலகில் இல்லை.
நாம் நம்மையே பார்க்கக்கூடிய முகம் காட்டும் கண்ணாடியாக இருக்கும் ஒரு உறவு முறையில், நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை,
நம் எதிர்வினைகள், முன் அபிப்ராயங்கள்,பயங்கள், மனச்சோர்வு, பதட்டங்கள், தனிமை உணர்வு, துயரம், வலி, துக்கம் இவைகளைக் கண்டறிய இயலும்.
நாம் அன்பு கொண்டு இருக்கிறோமா, அல்லது அன்பு என்ற ஒரு விஷயம் நம்மிடம் இல்லையா என்பதையும் நாம் கண்டறியலாம்.
ஆகவே, நாம் இந்த உறவுமுறை என்பது என்ன எனும் கேள்வியை ஆராய்வோம், ஏனெனில் அதுதான் அன்பின் அடிப்படை ஆகும்.