வாழ்வை வளப்படுத்தும் இயற்கை!

இன்றைய நச்:

நாம் எல்லோரும் உலகம் என்ற மண்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு இருப்பது ஒரே சூரியன் தான். நமக்கு ஏற்படும் நீர்த் தேவைகளுக்கு இருப்பது ஒரே கடல்தான். நாம் எல்லோரும் மூச்சு விடுவதற்கு உள்ள காற்றும் ஒன்றுதான். இவற்றில் ஒன்றைக் கூட நம்மில் எவரும் உற்பத்தி செய்ததில்லை.

நமக்கு அன்னையாகவும் தந்தையாகவும் உள்ள இயற்கை நாம் அனைவரும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ எல்லா வளங்களையும் நிறைவாக அமைத்துக் கொடுத்திருக்கிறது.

நமது சிந்தனையை உயர்த்தி, இவற்றை நாம் உணரும்போது நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

  • அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 
Comments (0)
Add Comment