எதிரியை நேசிக்கும் கலை!

ரசிக்கும் கவிதை:

ஆங்கிலத்தில் பேசி
பிரெஞ்சில் முத்தம் கொடுத்து
இத்தாலிய உடை உடுத்தி
கரீபியன் உணவருந்தி
சீனத்துப் பாடல் பாடி
தமிழில் நேசித்து
உலகை அன்பினால் அணைக்கும் ஆசையுடன்
முகநூலைத் திறந்தால்
வசை வார்த்தைகள்
மூக்கைப் பொத்த வைக்கின்றன.
வெறுப்பது சுலபம்.
பகைவரையும் மன்னித்து
அணைப்பது
அத்தனைச் சுலபமில்லை.
ஆயினும்
எதிரியை நேசிப்பது
ஒரு மாபெரும் கலகச் செயலல்லவா?
செய்துதான் பார்ப்போமே…
உலகையே
அன்பின் இசையினால் அணைக்கும்
மாபெரும் கலகம்.

– கவிஞர் இந்திரன்

Comments (0)
Add Comment