உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும்!

பல்சுவை முத்து: 

உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்;

உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்;

உலகில் போர்ப் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம் காத்து வாழவேண்டும்;

உலகமெங்கும் மனிதகுலம்
அமைதியெனும் ஒருவற்றாத
நன்னதி பெற்றுய்ய வேண்டும்!

– வேதாத்திரியம்

Comments (0)
Add Comment