காத்திருத்தலின் அவசியம்!

ரசனைக்குச் சில வரிகள் :

கதைகளைப் பொறுத்தவரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனத்தில் உருவம் பெற வேண்டும்.

உருவமும் ஓரளவு மொழிநடையும் கதைக்குக் கதை மாறும். மாற வேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம் அமைவது மிகக் கடினமான பகுதி.

ஒரு படைப்பின் உருவத்துக்காக நாட்கணக்கில், மாதக்கணக்கில், சிலவற்றுக்கு வருடக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டும்!

– அசோகமித்திரன்

Comments (0)
Add Comment