எதையும் பகுத்தறியக் கற்றுக் கொள்!

பல்சுவை முத்து:

நெடுங்காலமாக இருந்து வருகிறது
என்பதற்காக ஒன்றை நம்பிவிடாதே;
ஏராளமான மக்களால் போற்றிப்
புகழப்பட்டு வருகிறது
என்பதற்காகவே
நம்பிவிடாதே;
பண்டைக் காலத்து
ரிஷிகள் கூறியது,
பெரியவர்கள் கூறியது
என்பதற்காகவே
நம்பிவிடாதே;
எந்தப் பொருளையும்
நீயே கூர்ந்து கவனித்து
ஆராய்ந்து பார்த்து
அந்தப் பொருள் பகுத்தறிவுக்கு
பொருத்தமானதாக
இருந்தால் மட்டுமே 
அதை நம்பு!

– கௌதம புத்தர்

Comments (0)
Add Comment