பார்த்திபன் கவிதை ‘படித்தேன்’!

நடிகர் பாத்திபன் நெகிழ்ச்சி:

ஒருநாள்
நான் ஒரு ஃபோட்டோவைப் பார்த்தேன்.

அடுத்தநாள்
அடித்து அடித்து ஒருகவிதை எழுதினேன்.
அதற்கும் அடுத்தநாள்
அதை அனுப்பிவைத்தேன்.

ஆனால்,
அதை முதல்வரின் கண்கள் வாசித்தபோதே
விரல்கள் கருத்தை எழுதி,
அது உதயசூரியனின் கதிர்பாயும் வேகத்தில்
என் கைகளில்.

அதனால்தான், அவர் கலைஞர்களில் முதல்வர்.
 முதல்வர் கலைஞர்!

நன்றி: ‘பார்த்திபன்’ எழுதிய கிறுக்கல்கள் புத்தகத்தின் முன்னுரையில் இருந்து… 

Comments (0)
Add Comment