இது நாட்டை காக்கும் கை…!

நினைவில் நிற்கும் வரிகள்:
***

இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
அன்பு கை இது ஆக்கும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை
இது திருடும் கை அல்ல
நேர்மை காக்கும் கை
நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை
இது ஊழல் நீக்கும் தாழ்வைப் போக்கும்
சீர் மிகுந்த கை

(இது நாட்டை…)

வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை
இது தளரும் கை அல்ல
சுத்தக் கை புகழ் நாட்டும் கை
இது சுரண்டும் கை அல்ல
ஈகை காட்டும் கை
மக்கள் சேவை ஆற்றும் கை
முள் காட்டை சாய்த்து தோட்டம் போட்டு
பேரெடுக்கும் கை

(இது நாட்டை…)

உண்மைக் கை கவி தீட்டும் கை
கறை படிந்த கை அல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை
இது கெடுக்கும் கை அல்ல
மானம் காக்கும் கை
அன்னதானம் செய்யும் கை
சமநீதி ஒங்க
பேதம் நீங்க ஆள வந்த கை

(இது நாட்டை…)

– 1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘இன்று போல் என்றும் வாழ்க‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம்.

Comments (0)
Add Comment