முதல் தேதி கொண்டாட்டமும் கடைசி தேதி திண்டாட்டமும்!

நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் – சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் –
இருபத் தொண்ணிலே இருந்து
முப்பது வரைக்கும் திண்டாட்டம்

(ஒண்ணிலே…)

பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே
தேதி ஒண்ணிலே – மனுஷன்
படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே
இருபத்தொண்ணிலே…
முன்னே பட்ட கடனைத்
தீர்ப்பான் ஒண்ணிலே –
தேதி ஒண்ணிலே பின்னும்
மூணாம் பேஸ்து விழுந்தது போலே
முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே

(ஒண்ணிலே…)

தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம்
போவதற்கும் சில்லரையைப் போட்டு வைப்பார்
தேதி ஒண்ணிலே
அன்புடனே போட்டு வைத்த
உண்டியல் வாயைக் கொஞ்சம்
அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார்
இருபத்தொண்ணிலே – ஆமா…
சினிமா ட்ராமா காட்சிகளுக்கு
டிக்கட் கிடைக்காதொண்ணிலே
தியேட்டர் காலி
ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை
அதிகம் ஒண்ணிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு
கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே

(ஒண்ணிலே…)

கொண்டவனும் கொண்டவளும்
குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே –
தேதி ஒண்ணிலே அவர் –
கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே – முகம் கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே – எந்த
நாயும் எட்டிப் பார்க்காது
இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே –
பின்பு திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே

– 1955-ம் ஆண்டு என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த ‘முதல் தேதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் உடுமலை நாராயணகவி.

இந்தப் பாடலைக் கேட்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
https://youtu.be/UZ-GyhPPEkY

Comments (0)
Add Comment