சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம்!

– நடிகர் சசிக்குமார்

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது.

நந்தன் என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொள்ள தஞ்சாவூர் வந்த நடிகர் சசிக்குமார், அயோத்தி திரைப்படத்தை மக்களுடன் பார்வையிட்டார்.

அதன்பின்னர் படம் குறித்து பேசிய சசிக்குமார், “சாதி மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விசயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்துவந்துள்ள, செய்தியைத்தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கதை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம்தான். அயோத்தி என்பது எல்லோரும் கடந்து வந்திருக்கிறார்கள்” என்று உற்சாகத்துடன் பேசினார்.

Comments (0)
Add Comment