பெண்களின் அக உலகைக் காட்டும் ‘ஜன்னல் மனம்’!

சென்னை புத்தகக் காட்சி: நூல் அறிமுகம்

தீபா ஸ்ரீதரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ஜன்னல் மனம். இன்றைய நவீன பெண்களின் அக உலகை ஒளிவு மறைவின்றி சொல்ல முற்படுபவை தீபா ஸ்ரீதரனின் கதைகள்.

ஆண், பெண் உறவில் இருக்கும் அந்தரங்க உணர்வுகள், காதல், காமம் ஆகிய அனைத்தையும் குழப்பமில்லாத சீரான மொழியில் அவரால் சொல்லமுடிகிறது.

பொதுவாக சிறுகதைக்கு எடுக்கத் தயங்கும் சவாலான கதைக்கருக்களை மிக அனாசியமாக எழுதிச் செல்கிறார்.

தீபாவின் அயலக வாழ்க்கை தரும் அனுபவங்களும் அதற்கு கைகொடுத்திருக்கிறது.

இந்த முதல் சிறுகதைத் தொகுப்பின் மூலம் நம்பிக்கைக்குரிய பெண் எழுத்தாளர் ஒருவரின் வருகையை அறிவித்துள்ளார் தீபா ஸ்ரீதரன்.

ஜன்னல் மனம் (சிறுகதைத் தொகுப்பு)
தீபா ஸ்ரீதரன்

வெளியீடு: கடல் பதிப்பகம், மதுரை.
விலை ₹ 200

பேச: 8680844408 

Comments (0)
Add Comment