உன்னிடமுள்ள உழைப்பை நம்பு!

நினைவில் நிற்கும் வரிகள்:

இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை

இதயமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!

(எத்தனை பெரிய)

உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன?
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவராவார்

(எத்தனை பெரிய)

கோழியைப் பாரு காலையில் விழிக்கும்
குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்

(எத்தனை பெரிய)

தனக்கொரு கொள்கை
அதற்கொரு தலைவன்

தனக்கொரு பாதை
அதற்கொரு பயணம்

உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி

உழைத்திட வேண்டும்
கைகளை நம்பி!

(எத்தனை பெரிய)

-1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘ஆசைமுகம்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.

இசை: சுப்பையா நாயுடு.
குரல்: டி.எம்.சௌந்திரராஜன்.
இயக்கம்: பி.புல்லையா.

Comments (0)
Add Comment