வடிவேலு வெளியிட்ட கவிதைத் தொகுப்பு!

ரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட.

அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள்.

இந்த நூல்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக ‘உச்சினியென்பது’ என்ற அவரது முதல் கவிதைத் தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது.

இந்த நூலை மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வரும் வைகைப் புயல் நடிகர் வடிவேல் வெளியிட்டார்.

தற்போது ‘உச்சினியென்பது’ நூல் அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது.

Comments (0)
Add Comment