இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி!

          (ஆண்டவன் …)

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்குப் போன்ற தன் கரத்தையே நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி!

          (ஆண்டவன் …)

கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் அரும்பும்!
வாழ்க்கை என்றொரு பயணத்திலே

பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலரிருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி!

          (ஆண்டவன் …)

-1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘தொழிலாளி‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.

இசை: கே.வி.மகாதேவன்.  குரல்: டி.எம்.சௌந்தராஜன்.

Comments (0)
Add Comment