தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை…!

நினைவில் நிற்கும் வரிகள் :

“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவி நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா!

கனக விஜயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேர மகன்
இமய வரம்பினில் ஈமன்கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை!

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்”

– 1960-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மன்னாதி மன்னன்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற  இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இசை : எம்.எஸ்.வி.ராமமூர்த்தி. குரல் : டி.எம்.சௌந்திரராஜன்

Comments (0)
Add Comment