அச்சத்தைத் தவிருங்கள்… வந்து வாக்களியுங்கள்!

– ராகுல்காந்தி வேண்டுகோள்.

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் அமைச்சர்கள். பா.ஜனதா, சமாஜ்வாடி-லோக்தளம் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நாட்டின் அனைத்து அச்சங்களையும் தவிருங்கள்… வெளியே வந்து வாங்களியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

10.02.2022  11 : 55 A.M

Comments (0)
Add Comment