பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை சென்னை புத்தகக் கண்காட்சி!

ஜனவரியில் நடைபெறவிருந்த சென்னை புத்தகக் கண்காட்சி, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பிறப்பிக்கட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை 45வது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் புத்தக கண்காட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவுச் சீட்டு கொடுக்கலாம் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் சென்னை புத்தகக் காட்சியை நடத்த அனுமதி வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தினா் (பபாசி) கடந்த செவ்வாயன்று முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில், புத்தக கண்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

03.02.2022  5 : 30 P.M

Comments (0)
Add Comment