நான் யார், நான் யார், நீ யார்? 

நினைவில் நிற்கும் வரிகள்:

***

நான் யார் நான் யார் நீ யார்? 
நாளும் தெரிந்தவர்
யார் யார்?

தாய் யார்
மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர்
யார் யார் 

(நான் யார்…)

உறவார் பகையார்
உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ

வருவார்
இருப்பார் போவார்
நிலையாய் வாழ்வார்
யார் யாரோ

(நான் யார்…)

உள்ளார் புசிப்பார்
இல்லார் பசிப்பார் உதவிக்கு
யார் யாரோ 

நல்லார் தீயார்
உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ

அடிப்பார் வலியார்
துடிப்பார் மெலியார் தடுப்பார்
யார் யாரோ

எடுப்பார் சிரிப்பார்
இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ

(நான் யார்…)

பிணியார்
வருவார் மருந்தார்
தருவார் பிழைப்பார்
யார் யாரோ 

உயிரார் பறப்பார்
உடலார் கிடப்பார் துணை
யார் வருவாரோ

நரியார் நாயார்
கடிப்பார் முழிப்பார்
நாளைக்கு யார் யாரோ

பிறந்தார் இருந்தார்
நடந்தார் கிடந்தார்
முடிந்தார் யார் யாரோ 

(நான் யார்…)

– 1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘குடியிருந்த கோவில்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன்.

இசை – எம்.எஸ்.விஸ்வநாதன். குரல் – டி.எம்.சௌந்தரராஜன்.

23.12.2021 12 : 30 P.M

Comments (0)
Add Comment