போதுமென்ற மனம்!

இல்லாத விஷயங்களையே
அதிகம் நினைக்கிற நாம்,
இருக்கிற விஷயங்களை
மறந்து விடுகிறோம் என்பதே உண்மை;
பக்கத்து வீட்டுப் பால்கனியில்
பட்டாம்பூச்சி பறக்கிறதே என்று
எரிச்சல் அடைவதை விட்டு,
நம் வீட்டில் கரப்பான் பூச்சி
இல்லாமல் இருக்கிறதே
என்று பரவசப்படுங்கள்.
எதிர்காலப் பளபளப்புக்காக,
நிகழ்கால கலகலப்பைக்
கைவிட்டு விடாதீர்கள்.

Comments (0)
Add Comment