எல்லோர்க்கும் நல்ல காலம் உண்டு!

நினைவில் நிற்கும் வரிகள்:

*****

எல்லோர்க்கும்  நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு
வாழ்விலே இல்லார்க்கும்.
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

வினாக்களும் கனாக்களும்
வீணாக ஏன்
பொன்நாள் வரும் கைக் கூடிடும்
போராட்டமே
நாளை என்றோர் நாளை நம்புங்கள்

                     (எல்லோர்க்கும்)

மண் மீதிலே எந்த ஜீவனுக்கும்
அளவில்லாத ஆசைகள் ஒன்றல்லவே
ஓர் ஆயிரத்தை தாண்டி நிற்கும் தேவைகள்

நினைத்தது நடப்பது எவன் வசம்
அனைத்தையும் முடிப்பது அவன் வசம்
தெய்வம் என்ற ஒன்றை நம்புங்கள்

                              (எல்லோர்க்கும்)

  • 1993-ல் வெளிவந்த மறுபடியும் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் வாலி.
Comments (0)
Add Comment