நேற்றைய நிழல்

தமிழ் சினிமாவில் முதலில் என்னை பி.ஆர்.ஓ. ஆக்கியவர் எம்.ஜி.ஆர்!

1958 ல் ‘நாடோடி மன்னன்’ படத்திற்கு நான் மக்கள் தொடர்பாளராக ஆனேன். அதற்கு முன்பு பி.ஆர்.ஓ. என்ற ஒன்றில்லை. நான் தான் முதல் நபர். அப்படி வந்தது ஓர் சுவாரசியமான கதை. நடிகர் சங்கம் ‘நடிகன் குரல்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தது. யார் நடிகர் சங்கத்தின் தலைவரோ, அவர் தான் அந்த இதழின் வெளியீட்டாளராக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தான் அப்போது நடிகர் சங்கத் தலைவர். அவர் தான் பப்ளிஷரும். அந்தப் பத்திரிகைக்கு வித்வான் வே.லெட்சுமணன் […]

இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தார் நம்மிடையே!

1965-ம் ஆண்டில் ஒரு நாள்… திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில், நடந்து வந்து கொண்டிருந்தார். புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர். பி.கே.ஆர் வாரியார் அவர்கள் அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர் இருப்பதை கவனித்தார் டாக்டர் வாரியார். தனது கண்களை நம்ப முடியவில்லை அவரால், மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார். ஆமாம், அவர்கள் வேறு யாரும் இல்லை. டாக்டர் வாரியார் அவர்கள் சந்தேகப்பட்டது சரியே. அங்கே… அந்தத் திண்ணையில் இருந்தவர்கள், மார்க்சீய அறிஞரும், உலக வரலாற்றில், […]

இசைமயமான ஒரு தருணம்!

அருமை நிழல்: இசை இரட்டையர்களாகத் திகழ்ந்த விஸ்வநாதன் – ராமமூர்த்தி, சிம்பொனி மாஸ்ட்ரோ இளையராஜா, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் – நால்வரும் இணைந்து எடுத்த அபூர்வ ராகத்தைப் போன்ற புகைப்படம்!

என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான்!

“என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான். எல்லோருக்குமே முதல் ஆசிரியர், பெற்றோர்தான் என்கிற பொருளில் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு முதன்முதலில் ‘அனா ஆவன்னா…’ சொல்லிக் கொடுத்தது என் அம்மாதான். அனா, ஆவன்னா மட்டுமல்ல… ஐந்தாம் வகுப்பு வரை அம்மாதான் எனக்கு ஆசிரியர். என் வீடுதான் என் பள்ளிக்கூடம். சக மாணவர்கள் யாரும் கிடையாது. அப்போது நாங்கள் ஒரத்தநாடு தாலுகாவில் பாப்பாநாடு – மதுக்கூர் சாலையில் உள்ள குத்தகைக்காடு எனும் ஒரு குக்கிராமத்தில் வசித்து வந்தோம். அப்பா நாடுகடத்தப்பட்டு, […]

மணியம்மை இல்லை என்றால் அய்யாவை எப்போதோ பறிகொடுத்திருப்போம்!

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரைப் போல, வாழ்வில் அனைத்தையும் எதிர்கொண்டு, எதிர்த்தவர் மனங்களையும் வென்றவர் இருக்க முடியாது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க. உருவானதற்கு பெரியார் – மணியம்மையார் திருமணம் காரமணமல்ல என்பதற்கு பல சான்றுகள் உண்டு. இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களே பெரியார் திடலில் ஒரு நிகழ்வில் அரசியல் பாதைக்குச் செல்லும் எண்ணமே தி.மு.க. தோன்றக் காரணம் என்று கூறியதுண்டு. இதோ, அய்யாவிடமும் அண்ணா, கலைஞரிடமும் மாறாத பற்றுக் கொண்டவரும், அவர்களுடன் நெருங்கிப் பழகியவருருமான கவிஞர் கருணாநந்தம் […]

அன்றைய கலைவிழாவில் எம்.ஜி.ஆா்…!

அருமை நிழல் : சென்னை அன்னபூர்ணா உணவுச்சாலை நிதிக்காக ‘அகில இந்திய மாதர் உணவு மன்ற’த்தின் சார்பில் 06-10-1956-ல் நடைபெற்ற கார்னிவல்- கலை விழாவில் சரோஜினி வரதப்பன், எம்.எல்.வசந்தகுமாாி, குமாரி அபயம், ராஜசுலோசனா, சுசீலா, சென்னை கவர்னா் ஸ்ரீபிரகாசா, சந்திரபாபு, எம்.ஜி.ஆர்., எஸ்.ஏ.அய்யாசாமி செட்டியார் ஆகியோர்.