‘வெகுளிப் பெண்’ணின் வெற்றிக்கு அடித்தளமிட்ட நாகேஷ்!
நடிகை தேவிகாவின் காதல் கணவர் இயக்குநர் தேவதாசுக்காக தேவிகா சொந்தமாக தயாரித்து வெளியிட்ட படம் ‘வெகுளிப்பெண்’. இப்படம் 1971-ம் ஆண்டின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது. 1972-ல் கல்கத்தாவில் நடந்த விழாவில் ‘ரிக்ஷாக்காரன்’ படத்துக்காக ‘மக்கள் திலகம்’ ‘பாரத்’ விருது பெற்றபோது வெகுளிப்பெண் படத்துக்காக தேவிகாவும் விருது பெற்றார். ‘வெகுளிப் பெண்’ படத்தில் ‘எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றோம்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்பட துவக்க விழாவின்போது ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை துவங்கி […]
பாரதியையும் பாரதிதாசனையும் ஒன்றிணைத்த கண்ணதாசன்!
இருபதாம் நூற்றாண்டில் ஆகப்பெரும் இலக்கியச் செம்மல்களாக இருந்த பாரதியாரையும், பாரதிதாசனையும் இணைத்து கண்ணதாசன் பாடிய பாடல் வரிகளைக் தான் இங்கு பார்க்கப் போகிறோம். பாரதியும், பாரதிதாசனும் சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியில் தங்களது எழுத்துகளால் புகுத்தியவர்கள். பாரதியின் எழுத்துகள் அடிமை இருளில் சிக்கித் தவித்த பெண்களுக்கு வெளிவரும் துணிச்சலைத் தந்தது என்றால், பாரதிதாசனின் எழுத்துகள் தங்களது உரிமைக்காக பெண்களை புரட்சி செய்ய வைத்தது. தமிழ் திரைப்படத் துறையில் 5,000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள கண்ணதாசன், மரபுக் கவிதையின் […]
எம்.எஸ்.வி.யின் குறும்புகளை ரசித்த மனைவி!
அருமை நிழல்: எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியானது. “வடநாட்டில் சங்கர் – ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது” என்று, தன்னுடைய ‘பணம்’ என்ற படத்தில் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் ராமமூர்த்தி – விஸ்வநாதன் என்று போட்டவர் பணம் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன். அப்படத்திலிருந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் […]
மொழியைப் பாதுகாக்க தமிழறிஞரின் ஆலோசனை!
தமிழ் வழிக் கல்வியகத்தின் முடிவான கொள்கைகள் : மழலை முதல் பல்கலை வரை எல்லாத் துறைகளிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாக வேண்டும். இதுவே ஒரு மொழிக் கொள்கை. எந்த இந்திய மொழிகளையும் ஆங்கிலம் முதலான அயல் மொழிகளையும், துணை மொழிகளாகக் கற்கலாம், கற்க வேண்டும். கற்கும் பொது வாய்ப்புப் பெருக வேண்டும். இது துணை மொழிக் கொள்கை. தமிழ்நாட்டில் தமிழ் வழி கற்றவர்க்கே வேலையும் வேலை வாய்ப்பும், உயர் கல்வியும், பிற வாய்ப்புகளும் உண்டு. இது […]
இசைத்தமிழ்ப் பாடி அரும்சாதனை செய்த டி.ஆர்.மகாலிங்கம்!
‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை; நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை‘ எனும் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற வெண்கலக் குரல் பாடலை யாராலும் மறக்க முடியாது. இந்தப் பாடலைப் பாடி சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் டி.ஆர்.மகாலிங்கம். தென்கரை ராமகிருஷ்ணன் மகாலிங்கம் எனும் அவரின் முழு பெயரே டி.ஆர்.மகாலிங்கம் என திரைத்துறையில் பிரபலமாகியது. 1940 முதல் 1950களில் தமிழ்த் திரையுலகில் நடிகராகவும் பாடகராவும் பிரபலமாக விளங்கிய டி.ஆர்.மகாலிங்கம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் […]
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்!
அருமை நிழல்: “கேளடா மானிடா நம்மில் கீழோர், மேலோர் இல்லை” – என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தை எழுத்தில் பரப்பிய மகாகவி பாரதி இறுதிக் காலத்தில் எடுத்த அரிய புகைப்படம். கையில் கோலுடன் பாரதி எடுத்த அந்தக் காரைக்குடிப் புகைப்படம்.