‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் குழுவினர்!
அருமை நிழல்: ‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர்கள் முக்தா வி.சீனிவாசன், சி.வி. ராஜேந்திரன், தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி, பண்டரிபாய், ஏ.சகுந்தலா, காந்திமதி, கே.ஆர். விஜயா ஆகியோர் ஒன்றாக எடுத்துக் கொண்ட படம். – நன்றி: ‘பிலிமாலயா’ சினிமா இதழ்
சமூக மாற்றம்தான் சிந்தனை மாற்றத்தைக் கொடுக்கும்!
தேர்தல்களால் அரசாங்கத்தைத் தான் மாற்ற முடியும். மக்களின் சிந்தனையை மாற்ற முடியாது. சமூக மாற்றங்களால்தான் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதைத்தான் தந்தை பெரியார் செய்தார். சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்கும், சமூக நீதியைக் கொண்டு வருவதற்கும் பெரியார் செய்துள்ள மிகப்பெரும் தொண்டு பிரதமர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் செய்ய முடியாததாகும். – முன்னாள் பிரதமர் வி.பி சிங் டிசம்பர் 29, 1992-ல் திருச்சியில் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து. நன்றி: தி […]
உள்ளம் உருகப் பாடினால் கேட்கிறவங்க மனசு உருகும்”
தளதளக்கும் கெட்டித்தயிர். சற்றே இளகிய மெழுகு. டி.எம்.எஸ்.ஸின் கம்பீரமான குரலைக் கேட்டதும் மனதுக்குள் தோன்றும் மானசீகமான சித்திரங்கள் இவை தான். எப்போது கேட்டாலும் சிறகை அசைக்காமல் வானில் பறக்கும் பறவையைப் போலிருக்கும் அந்தக் குரல். மதுரையில் சௌராஷ்டிர சமூகத்தினர் வசிக்கும் அரசமரம் பிள்ளையார் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர் வந்து பாடுவார். அடர்த்தியான கூட்டம் பல மணி நேரங்களுக்குக் கட்டுப்பட்டு உட்கார்ந்திருக்கும். இளம் வயதில் நள்ளிரவு தாண்டியும் அவர் குதூகலத்துடன் பக்திப் பாடலில் ஆரம்பித்து, திரைப்படப் பாடல்களைப் […]
பெருந்தலைவர் காமராஜருடன் குமரி அனந்தன்!
அருமை நிழல்: பெருந்தலைவர் காமராஜர், நடிகர்திலகம் சிவாஜியுடன் குமரி அனந்தன். * நன்றி:நடிகர் திலகம் ரசிகர்கள் குழு
கவியரசரின் தம்பி என்பதில் எப்போதுமே பெருமை!
என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்பு தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை என்னிடம் சொல்லும்போதெல்லாம் “அந்தப் பட்டப் படிப்பெல்லாம் ரெண்டே ரெண்டு எழுத்து தான். இப்போ நான் படிச்சிருக்கிறது எஸ்.எஸ்.எல்.சி. இது நாலு எழுத்து. நான் சினிமா எடுத்து அப்புறமா ஏகப்பட்ட பட்டம் வாங்கிக்கிறேன். அதுதான் என்னோட ஆசை’ என்று கூறிவிட்டு […]
மஹர் ஒருவர் பௌத்தராவதால் என்ன நடந்துவிடப் போகிறது?
மஹர் ஒரு பௌத்தராவதால் அப்படி என்ன நடந்துவிடப் போகிறது. ஹர் என்று சிலர் கூறுவார்கள். அப்படிச் சொல்லாதீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கு ஆபத்தானது. மேல் தட்டில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் மதத்தின் அவசியம் பற்றி உணர மாட்டார்கள். இவர்களில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு வசிப்பதற்கு மாட மாளிகைகள் இருக்கின்றன. அவர்களுக்கு சேவை செய்வதற்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணமும் பந்தாவும் செல்வாக்கும் அந்தஸ்தும் மரியாதையும் இருக்கின்றன. செல்வமும் இவ்வகையைச் சேர்ந்தவர்கள் மதத்தைப் பற்றி நினைப்பதற்கோ அல்லது […]