நேற்றைய நிழல்

சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி. இயல்பாகவே இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட உடுமலை நாராயண கவி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர். திரையுலகில் தனக்கென ஒரு தனி மதிப்பையும் புகழையும் உண்டாக்கிக் கொண்டவர். ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியவர். ஏறத்தாழ 10,000 பாடல்கள் எழுதியுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள். கலைவாணர் வாழ்ந்த காலம் வரை அவர் […]

நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்த காலம்!

அருமை நிழல்: அந்த காலத்தில் புகழ்பெற்ற காமெடி ஜோடி என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம். பின்னாளில் வாழ்க்கையிலும் ஜோடி ஆனார்கள். டி.ஏ.மதுரம் காமெடி கேரக்டர்களில் மட்டுமல்லாமல், ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் காமெடி கேரக்டர்களில் நடித்த நிலையில் அவர் ஹீரோயினாக நடித்த படம் ‘பாண்டுரங்கன் அல்லது ஜெய் ஜெய் விட்டல்’. இந்த படத்தை டி.சி.குனே என்பவர் இயக்கி இருந்தார். எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாண்டுரங்கன் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்தார். காளி என்.ரத்னம் வில்லனாக நடித்திருந்தார். வேல் […]

இருபெரும் துருவங்களை இணைத்த ‘கூண்டுக்கிளி’!

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி. தங்களது படங்களில் மக்களுக்கு தேவையாக சிறந்த கருத்துக்களை வலியுறுத்துவதில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல என்பதை இன்றும் அவர்களது படங்கள் நமக்கு உணர்த்திக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் தங்கள் தனித்தனியாக நூற்றுக்கு அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது ஒரே படம் தான் என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்த ஒன்று. 1954-ம் ஆண்டு வெளிவந்த […]

ராஜீவும், எம்.ஜி.ஆரும்!

அருமை நிழல் : சென்னையில் நடந்த விழா ஒன்றில் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தியுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

இயக்குநர்கள் சங்கமம்!

அருமை நிழல்: * தமிழ்த்திரை இயக்குநர்களிடையே பரஸ்பரம் இருந்த புரிதலும், நட்பும் நெகிழ்ச்சியானவை. ஒருவருடைய திரைப்படத்தை மற்ற இயக்குநர்கள் மதித்துப் பாராட்டியிருக்கிறார்கள். இயக்குநர் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, மனோபாலா அனைவரும் விழா ஒன்றில் ஒன்றிணைந்த தருணம். #கேபாலசந்தர் #பாரதிராஜா #பாலுமகேந்திரா #ஆர்கேசெல்வமணி #மனோபாலா #KBalachander #Bharathiraja #BaluMahendra #RKSelvamani #Manobala

சக நடிகருக்கு அடையாளத்தையும் அடைமொழியையும் கொடுத்த என்எஸ்கே!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடன் நாடகத்தில் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் தமது சொந்தப்படங்களில் வாய்ப்புக்கொடுத்தார். கலைஞர்கள் அனைவருக்கும் இருக்க இடம், சாப்பாடு கொடுத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். மாதந்தோறும் அவர்களுக்குச் சம்பளமும் கொடுத்து வந்தார். இது தவிர, கலைஞர்களின் பிற பணத் தேவைகளுக்கும் உதவி செய்து வந்தார் கலைவாணர். புளிமூட்டை ராமசாமி, டி.எஸ்.துரைராஜ், எஸ்.என்.லட்சுமி, காக்கா ராதாகிருஷ்ணன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருந்தது. பாடல்கள் எழுதுவதற்கு உடுமலை நாராயணகவிராயர், கதை […]