கல்வி

மாற்றுக் கல்விமுறையை எளிமையாகக் கற்றுத்தரும் நூல்!

நூல் அறிமுகம்: பிரேசில் நாட்டவரான பாவ்லோ ஃப்ரெய்ரே (1921-1997), சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளராகவும் மாற்றுச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். பிரேசில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கான கல்விமுறை குறித்து நவீன சிந்தனைகளின் அடிப்படையில் புதிய கோட்பாடு ஒன்றை உருவாக்கியவர். கல்வி என்பது நவீன உலகிற்குத் தேவையான பயிற்சியாளர்களை உருவாக்குவதல்ல. மாறாக, அது மனிதர்களின் தனித்துவங்களை மீட்டெடுப்பது. மனிதர்கள் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடும் புள்ளிகளில் இரண்டு முக்கியமானவை. அவர்கள் தாம் வாழும் உலகை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. […]

விவசாயியாக மாறிய இஸ்ரோ விஞ்ஞானி!

பெங்களூருவில் இஸ்ரோ திட்டம் ஒன்றில் பணியாற்றிய திவாகர் சின்னப்பா, சட்டென முடிவெடுத்து விவசாயத்திற்கு வந்துவிட்டார். கர்நாடக மாநிலம் பேகூர் கிராமத்தில் பிறந்த அவரது தந்தையோ, தன் மகன் விவசாயம் பக்கமே வந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார். ஆனால் நடந்தது என்னவோ வேறு. “பெங்களூரு நகரம் விரிவுபடுத்தப்பட்டதால் கிராமத்தை நாங்கள் இழந்தோம். எங்களுக்கு விவசாயம் என்பது நஷ்டமான தொழிலாக மாறியது. விவசாயம் செய்வதற்காக நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலம் வாங்கினார் அப்பா. ஆனால் அங்கே […]

ஹிட் 3 – நடிகர் கார்த்தியும் ‘இதில்’ இருக்கிறார்!

ஒரு கோடு கிழித்தால், அதனை விடப் பெரியதாகக் கோடு இட வேண்டும் என்கிற மனப்பான்மை எல்லா இடங்களிலும் உண்டு; அப்படியிருக்க, திரைத்துறை மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? அந்த வகையில், ‘வன்முறை’ தெறிக்கிற படங்களை ‘பான் இந்தியா’ படங்களாக உயர்த்திப் பிடிக்கிற கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. அந்த ஒரு அம்சத்தினால் மட்டுமே பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்திட முடியும் என்ற நம்பிக்கைக்கான உதாரணங்களாக மார்கோ உள்ளிட்ட சில படங்கள் கைகாட்டப்படுகின்றன. அப்படியொரு சூழலில் தான் […]

நாவலைத் திரைப்படமாக்கும் யுக்திக்கு அடித்தளமிட்ட சுஜாதா!

ஒரு பேட்டியில் “உங்களைத் தொடர்ச்சியாக இயக்குவது எது?’ என்று எழுத்தாளர் சுஜாதாவிடம் கேட்கப்பட்டது. “தெரிந்து கொள்ளும் ஆர்வம்” இதுதான் அவர் சொன்ன பதில். அவரது பலதுறைப் பரிமாணங்களைப் போலவே, திரையுலகப் பங்களிப்புக்கும் இந்த ஆர்வம்தான் அவரை இயக்கியிருக்கிறது. எழுத்தாளர்களுக்கும் திரையுலகத்துக்குமான உறவு, 1930களிலேயே தொடங்கிவிட்டது. பாவேந்தர் பாரதிதாசன், அகிலன், கல்கி, புதுமைப்பித்தன், விந்தன், ஜெயகாந்தன் எனத் தொடர்ந்தது. இந்த வரிசையில் சாண்டில்யன், பி.டி. சாமி போன்றவர்களும் உண்டு என்றாலும், அதன் நீட்சி 2019-ல் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய […]

வசீகரிக்கும் ஸ்ரீதரின் ‘யாரோ எழுதிய கவிதை’ படப் பாடல்கள்!

தான் முதன்முறையாக இயக்கிய ‘கல்யாணப்பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ முதல் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ உட்படப் பல படங்களில் ‘முக்கோணக் காதல்’ கதையைத் திறம்படக் கையாண்டவர் ஸ்ரீதர்.

பத்திரிகைச் சுதந்திரம் வலுப்பெற வேண்டும்!

மே – 3 : உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day). உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19-ல் இடம் பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. 1993-ம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3-ம் […]