இந்தியாவை அதிரவைத்த சில விமான விபத்துகள்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் நேற்று (12.06.2025) மதியம் 1.40 மணியளவில் விபத்திற்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில், விசாரணைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியில் […]
பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்?
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் ரகசிய வார்த்தைகள் குறித்தும், அவற்றின் அர்த்தங்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம். டெட்ஹெட் (Deadhead) என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? அல்லது பேன்-பேன் (Pan-pan) என்ற வார்த்தைக்கான அர்த்தம் தெரியுமா? இந்த வார்த்தைகளுக்கான விளக்கங்களை நீங்கள் தெரிந்து வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இவை எல்லாம் விமானங்களின் பைலட்கள் பேசும் ரகசிய மொழியின் சில வார்த்தைகள். பைலட்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த ரகசிய மொழியைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். […]
இப்பத்தான் பாடலாசிரியர்கள் சுதந்திரமா இயங்குறாங்க!
சினிமாவில் பாட்டெழுத ஆரம்பிச்சாச்சு. எங்க போனாலும் மன்மதராசா பாட்டு சூப்பர்னு சொவ்லாங்க. கூடவே இப்ப கணையாழியில இருக்கீங்களான்னு ஒரு கேள்வி. அப்பதான் இரண்டுக்குமான முகங்கள் வேறன்னு தெரிஞ்சது. கணையாழியில இருந்து வெளியேறதா முடிவு பண்ணேன். அந்தப் பாடலை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். அந்தப் பாடலை 100 சதவீதம் விரும்பித் தான் எழுதினேன். கணையாழியில் இருந்து வெளியேறினதும் கணையாழி வாசகர் விஜயராகவன்னு நாம ஒரு பத்திரிகை ஆரம்பிச்சா என்னன்னு கேட்டார். எட்டு இதழ்கள் வெளிவந்தது. நாங்க இரண்டு […]
நிலமற்றவனை நினைக்கும் மழை!
கவிதை நூல் அறிமுகம்: திரும்ப முடியாத கருவண்டு திருப்பிப் போட்ட என்னை கடவுள் என்று நம்பிக் கடந்தது – என்பது உள்ளளவில் உண்மையையே கூறுகிறது. உதவுபவனே மனித வடிவில் கடவுள் அல்லவா?… அம்மாவின் பாதி முத்தம் தம்பியின் பாசத்தைக் காட்டியது இருட்டும் மாளிகையானது இல்லாமையின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது – திண்ணைகளே முதுமையின் வாசஸ்தலமாய் ஆனதை காட்டுகிறது. திருவிழாவில் மழை வருகிறதோ இல்லையோ சாதி சண்டை வருகிறது ஒரு சாமியும் ஆடும்போது சாதி சண்டை வேண்டாம் […]
கவிதை என்பது என்ன?
வாசிப்பின் ருசி: கவிதை என்பது… ஒரேயொரு மணல்துகளில் உலகைக் காண்பது; ஒரேயொரு காட்டு மலரில் விண்ணகத்தைப் பார்ப்பது; உள்ளங்கையில் முடிவற்ற எண்ணிக்கையை மூடிவைப்பது; ஒரு மணிநேரத்தில் ஒரு முடிவற்ற யுகத்தைக் காண்பது! – கவிஞர் வில்லியம் பிளேக்
கோபத்தால் ஏற்படும் பேரிழப்பு!
தாய் சிலேட்: கோபப்படும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் அறுபது நொடி நேர மகிழ்ச்சியை இழக்கிறீர்கள்! – ரால்ப் வால்டோ எமர்சன்