இலக்கியம்

சினிமாவை விரும்பாத பெரியார் சீனிவாசனுக்காகப் பார்த்த படம்!

அருமை நிழல்: தந்தை பெரியார் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்றாலும் முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய ‘சூரியகாந்தி’ எனும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை, முக்தா சீனிவாசனின் அன்பு வேண்டுகோளை ஏற்று, படத்தை முழுமையாகப் பார்த்தார். இது ஜெயலலிதா நடித்த 100-வது படம். படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டபோது பெரியாருடன் முக்தா சீனிவாசன், ஜெயலலிதா, முத்துராமன் மற்றும் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம். – நன்றி: முகநூல் பதிவு

எங்கிருந்தாலும் முக்தாவின் பணம் தேடிவந்து விடும்!

1954-ல் ‘அந்தநாள்’ படம் எடுத்தபோது, அதில் ஒரு உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன். 1957-ல் அவர் முதலாளி என்ற படம் எடுத்தார். அதில் வரும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ பாடல் தமிழ் நாட்டையே கலக்கியது. தேவிகா அதில் அறிமுகமானார். அந்தப் படத்தை நான் எட்டாவது படிக்கும்போது ஒரு பள்ளிச் சிறுவனாக இருந்து பார்த்தவன். அதற்குப் பிறகு 12-வது முடித்து ஓவியக்கல்லூரி முடித்து சினிமாவுக்கு வந்தபோது அதே தேவிகா எனக்கு ஜோடியாக நடித்தார். “இந்தப் […]

பகட்டை விரும்பாத ஆளுமைகள்!

அருமை நிழல்: தரையில் அமர்ந்து சாப்பிடுவது எவ்வளவு சுகமான அனுபவம். ம‌க்க‌ள் திலகம் எம்.ஜி.ஆருடன் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் என்.டி.ராமராவ் ஆகியோர் உணவருந்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம். நன்றி: முகநூல் பதிவு #ம‌க்க‌ள்திலகம் #எம்.ஜி.ஆர் #பிவிநரசிம்மராவ் #என்டிராமராவ் #mgr #makkalthilagam #pvnarasimmarav #ntramarav

மக்கள் மொழியை இயல்பாகப் பேசும் ழாக் ப்ரெவர்!

நூல் அறிமுகம்: மக்களையும் கவிதையையும் ஒன்றுசேர்க்க என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கவிதையும் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் கவிதைக்கென்று இருக்கும் ஒரே ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ப்ரெவெரின் படைப்புகள்தான். பாமர மக்களின் மொழியை அவர் இயல்பாகப் பேசுகிறார்; அவர்கள் மொழியின் கற்பனை வளம், அதில் மறைந்திருக்கும் மேதாவிலாசம், சிக்கல்கள் இவற்றுடன் நேரடித் தொடர்பு கொண்டிருக்கிறார். பாமர மனிதனுக்கென்று ஒரு தொன்ம உலகம் (mythology) இருக்கிறது; அவனுடைய அன்றாட வாழ்க்கைக்குள் இருந்துகொண்டுதான் […]

பெரியவன்: ஆர்ப்பாட்டம் இல்லா நீரோட்டம்!

நிறைவான வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாசிப்பு, மனிதர்களுடனான உறவு, நேர்மை என உயர்ந்துநிற்கிறார் பெரியவன். நாவலை வெளியிட்ட மறுநாளே அதன் நாயகராகிய நடராசன், இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் என்பது பெருந்துயரம்.

கல்வியே மனிதனை மாமனிதனாக்கும்!

நூல் அறிமுகம்: “ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் போதும் இந்த உலகை மாற்ற” என்றவர் மலாலா. மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, வலிமையான வழிகாட்டியாக மாறியிருக்கிறார். வரலாற்றில் இப்படிப்பட்ட அதிசயங்கள் அபூர்வமாகத்தான் நிகழும். பலரும் நினைப்பதைப்போல் தாலிபனால் சுடப்பட்டதாலோ, மரணத்தோடு போராடி மீண்டு வந்ததாலோ மலாலாவுக்கு வரலாற்றில் இந்த இடம் கிடைத்துவிடவில்லை. நோபல் அமைதிப் […]