இலக்கியம்

முரட்டு இளைஞன் மார்க்ஸ், ‘மூலதன’ அறிஞனான கதை!

நூல் அறிமுகம்: முரட்டு இளைஞன் மார்க்ஸ், ‘மூலதன’ அறிஞனான கதை என்று நூலைத் ‘தீக்கதிர்’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் வே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, அண்மையில் சென்னை ‘கேரள சமாஜம்’ அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இந்திய மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக்கட்சியின் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டு தத்தம் கருத்துக்களை முன் வைத்தது மிகச் சிறப்பானதாகும். இந்த நூலிற்கான ‘ஆசிரியரின் விளக்கம்’ பகுதியில் […]

இலக்கியத்தில் அப்டேட் ஆகுமா அரசு?

அண்மையில் நடந்த, நான் பங்கேற்ற கூட்டமொன்றில் எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுடன் உரையாடி, மாணவர்களைக் கொண்டு அவர்களைப் பற்றிப் பேச வைத்து, எழுத்தாளர்கள் குறித்து வினாடி வினாப் போட்டியும் வைத்தோம். எல்லாமே எழுத்தாளரை மையமிட்டுத்தான். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் (தனியார் அறக்கட்டளை நடத்தும்) ஊட்டி இலக்கிய விழாவில் மாலை நேர அரங்கில் என்னுடைய நாவல் “நிழல் பொம்மையை” முன்னிட்டு எழுத்தாளர் திலீப் குமாருடன் உரையாடுகிறேன். இப்படி எழுத்தாளரை, அவரது நூலை முன்னிலைப்படுத்தி இலக்கியத்தை புரொமோட் செய்யும் போக்கு அனேகமாக […]

எறும்புகளிடமிருந்து எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?

நூல் அறிமுகம்: எறும்புகளின் வரிசை கலைகிறது! என்றாவது நீண்ட வரிசையில் எல்லோருக்கும் கடைசி ஆளாக நின்று இருக்கிறீர்களா? மெதுவாக நகரும் வரிசையின் மீது எரிச்சலும் வெறுப்பும் ஏற்பட்டதா? அப்படி எனில் நீங்கள் முழுதாக இதனை வாசிக்க வேண்டும் என்ற முன்னுரையே இந்நூலை நோக்கி நம்மை ஈர்க்கிறது. “என்பிலதனை வெயில் போல காயுமே” என்ற குறளைப் படிக்கும்போது கூட நாம் எறும்பை கண்டு கொண்டதே இல்லை. எப்போதாவது எறும்பு நம் காதிற்குள் நுழையும் போதோ அல்லது காலை கடிக்கும் […]

ஒருவேளை நான் மரித்தால் இந்தப் பதிவை நீங்கள் மேற்கோள்காட்டக் கூடும்.

கல்லூரிப் பேராசிரியராகக் கிடைத்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு எழுத்தாளராகத்தான் ஆகவேண்டும் என்று தீர்மானித்தபொழுது – பிரபஞ்சன் மிகவும் எதிர்த்தார். “என்னுடைய துயரம் என்னுடனே முடிந்து போகட்டும் தமயந்தி” என்று சொல்வார். ஆனாலும் அந்த எழுத்தின் மீதான பிரமிப்பு என்னை இந்த முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. அப்போதெல்லாம் நினைப்பேன் – என்னுடைய புத்தகங்களுக்கு, என்னுடைய எழுத்துக்கு நிறைய ராயல்டி வரும் – அதை வைத்துக்கொண்டு நான் ஆறு மாதம் எழுதவேண்டும் ஆறு மாதம் பயணம் செய்யவேண்டும் என்று. ஆனால் ஒரு […]

எழுத்து – நம்மை நாமே நேசிக்க வைக்கும் கண்ணாடி!

யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கலைஞனுக்கு இருக்கவே கூடாது. சிந்தனையைத் தூண்டக் கூடிய, வாதங்களை உருவாக்கக்கூடிய, கருத்துக்களை வாதத்துக்கு அழைக்கக்கூடிய எழுத்துக்களை எழுதுவதுதான் நம் வேலை. டிஜிட்டல் யுகத்தில் தகவல் குப்பைகளில் இருந்து நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை கேள்விக்கு உட்படுத்தவேண்டும். வாசகர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என எழுதாதீர்கள். வாசகனுக்கு இது பிடிக்கும் என எழுதாதீர்கள். உங்களுக்கு பிடித்த பெண்ணைக் காதலித்து மணப்பது போல பிடித்த விஷயத்தை எழுத வேண்டும். […]

தமிழை உலகறியச் செய்த கால்டுவெல்லை அறிவோம்!

நூல் அறிமுகம்:  * இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றின என்றும், இந்திய மொழிகளுக்கு சமஸ்கிருத மொழியே தாய் என்றும் புனைகதை பேசி, பல நூற்றாண்டுகளாக மக்களை மடையர்களாக்கி நம்ப வைத்து அதிகாரம் செய்தார்கள் ஆதிக்க சாதியினர்! * இந்தப் பொய்க் கருத்தை அறிவு பூர்வமாகவும் பல மொழிகளை ஆய்வு செய்து ஒப்பிட்டும் அந்த புனைவை மறுத்து, உண்மையை உலகிற்கு உரக்கச் சொன்ன வெள்ளையரின் பெயர் – ராபர்ட் கால்டுவெல் (1814 – […]