நேற்றைய நிழல்

சிம்புவை அணு அணுவாகச் செதுக்கிய டி.ராஜேந்தர்!

அருமை நிழல்: சிம்பு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகின்றார். சிறு வயதில் தன் தந்தை டி.ராஜேந்தர் இயக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தார் சிம்பு. மிகப்பெரிய நடிகராக வளர முக்கியக் காரணம், அவரின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தான். சிறு வயது முதல் சிம்புவிற்கு சினிமாவை கற்றுக்கொடுத்தது டி.ராஜேந்தர் தான். டி.ராஜேந்தர் தயாரித்த தாய் தங்கை பாசம், ஒரு வசந்த கீதம், என் தங்கை கல்யாணி மற்றும் […]

வலம்புரி ஜானின் எரிமலைப் பேச்சு!

வலம்புரிஜான். ‘வார்த்தைச் சித்தர்’ என்றழைக்கப்பட்ட அற்புதப் பேச்சாளர். வெளிப்படைத் தன்மையும், அழகியல் நடையும் கொண்ட மொழியோடு எழுதியவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்றதோடு, பதவிப் பொறுப்புடன் டெல்லியில் முழங்கியவர். தொலைக்காட்சியில் இயற்கை உணர்வைப் போதித்தவர். பழகியவர்களிடம் உண்மையான இயல்போடு இருந்தவர். எல்லாவற்றுடன் ‘தாய்’ வார இதழை முன்னிலைப்படுத்திய ஆசிரியர். பல பத்திரிகையாளர்களை அரவணைத்து வளர்த்தவர். அவரை இந்நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம். பத்திரிகையாளரும், கவிஞரும், தற்போது கவனிக்கத்தக்க ஆய்வாளராகவும், பேச்சாளராகவும் பன்முகம் கொண்ட கடற்கரயின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் […]

பாவலர் சகோதரர்களின் இளமைக் காலம்!

அருமை நிழல் : தமிழ் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே இசைஞானி இளையராஜாவும், அவரது சகோதரர்களும் பொது நிகழ்ச்சிகளிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அப்படி இளையராஜா சகோதரர்களின் இசைக்குழுவில் இணைந்தவர்கள் தான் பின்னாளில் மிகப் பிரபலமான பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர். அப்படியான இளையராஜாவின் இளமைக்கால நாட்களில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் பாடகர் மலேசியா வாசுதேவன், இசைஞானியின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர், இசைஞானி இளையராஜாவுடன் அவரது தம்பி கங்கை […]

மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ்!

மனித குலம் விடுதலைப் பெறக் கூர்மையான தத்துவத்தை வகுத்துக் கொடுத்த தத்துவவியலாளர் கார்ல் மார்க்ஸ். நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது என்றார் மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ். ஆளும் வர்க்கத்துக்கு எதிராகவும், பாட்டாளி வர்க்கத்துக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்ததால் பல்வேறு நாடுகளில் இருந்து துரத்தப்பட்டவர், மாபெரும் சிந்தனையாளர் மார்க்ஸ். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவரான கார்ல் மார்க்ஸ், அரசியல், வரலாறு, பொருளாதாரத்தில் வல்லுனர். தலைசிறந்த […]

‘துப்பறியும் சாம்பு’ – சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காவியம்!

எழுத்தாளர் தேவன் என்று சொன்னால், மனதில் முதலில் தோன்றுவது ‘துப்பறியும் சாம்பு’ என்ற நகைச்சுவை கலாட்டா. ஆர்.மகாதேவன் என்கின்ற தேவன் பிறந்தது செப்டம்பர் 8-ம் தேதி, 1913-ம் வருடம், திருவிடைமருதூரில். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற அவர் பல வருடங்கள் ஆனந்த விகடனில் பணியாற்றினார். தமிழ் எழுத்துலகில் தனக்கென்று ஒரு சிம்மாசனம் அமைத்துக் கொண்ட சுஜாதா, தன்னுடைய எழுத்திற்கு முன் மாதிரியாகக் குறிப்பிட்டது அமரர் கல்கி மற்றும் தேவன் இருவரையும்தான். சோ, அவருடைய எழுத்துலக […]

‘வெகுளிப் பெண்’ணின் வெற்றிக்கு அடித்தளமிட்ட நாகேஷ்!

நடிகை தேவிகாவின் காதல் கணவர் இயக்குநர் தேவதாசுக்காக தேவிகா சொந்தமாக தயாரித்து வெளியிட்ட படம் ‘வெகுளிப்பெண்’. இப்படம் 1971-ம் ஆண்டின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது. 1972-ல் கல்கத்தாவில் நடந்த விழாவில் ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்துக்காக ‘மக்கள் திலகம்’ ‘பாரத்’ விருது பெற்றபோது வெகுளிப்பெண் படத்துக்காக தேவிகாவும் விருது பெற்றார். ‘வெகுளிப் பெண்’ படத்தில் ‘எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றோம்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்பட துவக்க விழாவின்போது ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை துவங்கி […]