நாட்டு நடப்பு

இத்தாலி கார் ரேஸில் அஜித் அணிக்கு 3-வது இடம்!

இத்தாலியில் நடைபெற்ற Mugello கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி, 3வது இடம்பிடித்துள்ளது. துபாய் ரேஸிலும் பங்கேற்று வெற்றிபெற்றார்.

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பாரா பிரதமர்?

செய்தி:      வரும் ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பான தகவலை அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தின்போது திருகோணமலை மாவட்டம் சம்பூர் மின்னுற்பத்தி நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் என்கின்றனர். இதற்காக இலங்கை மின்சார வாரியமும் இந்திய தேசிய அனல்மின் கழகமும் இணைந்து பணியாற்ற உள்ளது. கோவிந்த் கமெண்ட்: பிரதமர் மோடி ஜி கடல் கடந்து போனால் ஆரவாரமாக […]

தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!

மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா சிந்துவெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பு இந்நிகழ்வு. திடீரென சில கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் நடத்தப்படும் அகத்திய கருத்தரங்குகளுக்கு பின்னால் இருக்கும் மொழி சார்ந்த அரசியலையும், திணிக்கப்படும் கற்பிதங்களையும் கட்டுடைக்கும் வகையிலான தரவுகள் வழங்கி […]

‘புதையலை பூதம் காக்கும்’ என்பதை நம்பாதவரா நீங்கள்?

ஓர் இடத்தில் புதையல் இருந்தால் அந்த புதையலை யாரும் எடுக்க விடாமல் தடுக்க, கூடவே ஒரு பூதமும் இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். சின்ன வயதில் நாம் கேட்ட பாட்டி கதைகளில் புதையல் காக்கிற பூதங்கள் நிறைய வந்திருக்கும். ஒரு பெரிய புதையலையோ, அரியதொரு பொருளையோ பழங்காலத்திலே அக்கடாவென்று அப்படியே விட்டுவிட்டுப் போகிற வழக்கம் கிடையாது. புதையலுக்குக் காவலாக யாரையாவது அல்லது எதையாவது வைத்துவிட்டுப்போகிறதுதான் வழக்கம். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி திருக்கோயிலில் அங்கிருக்கும் புதையலை எடுக்கவிடாமல் […]

கருப்பு வெள்ளை நிறத்தில் ஏன் வித்தியாசம்?

இன, நிற வேறுபாட்டை காரணம் காட்டி எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை கீழ்த்தரமாக நினைப்பது தவறு, இப்படி கருதுவதற்கு எந்த விஞ்ஞானப்பூர்வமான காரணங்களும் இல்லை என்பதே உண்மை. அப்படி இருக்கையில், இந்த உலகில் நிறத்தில் வேறுபாடு பார்ப்பது மனிதர்கள் மட்டுமே. இயற்கை எத்தனையோ விதமான நிறங்களில் காட்சி அளிக்கிறது. அதனை நினைத்து நாம் ஒரு போது சிந்தித்தது இல்லை. ஆனால், ஏன் நாம் மனித நிறத்தை மட்டும் குறை சொல்கிறோம் என்பது புரியாத புதிர். வெள்ளை […]

தமிழர் நிதி நிர்வாகம்: நூல் வடிவில் ஓர் ஆவணக் காப்பகம்!

பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வளர்ந்த வரலாற்றையும், தமிழ் நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை நூலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகின்றன.