நாட்டு நடப்பு

மாநிலங்களவையில் ஒலிக்கவிருக்கும் பெண் கவிக்குரல்!

கவிஞர் சல்மா. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கிய உலகில் எழுச்சியோடு உச்சரிக்கப்படுகிற பெயர். அதேநேரத்தில், திராவிடச் சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பால் அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயலாற்றி வருபவர். அவரால் விளைந்த பணிகளின் பயன்கள் இம்மண்ணில் உரம் பெற்ற ஒவ்வொரு தருணத்திலும், அந்த உழைப்புக்கான அங்கீகாரம் அவரைத் தேடிச் சென்றடைந்துள்ளது. இப்போது மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அவரைத் திமுக அறிவித்திருப்பதும், அந்த வகையில் சேர்கிறது. பெரும்பாலும் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்பு என்பதால், மாநிலங்களவையில் […]

ராப் – அடக்கப்பட்ட உணர்வுகள் வெடித்து வரும் ஓசை!

கலைக்கு மட்டுமே சாதி, மதம், இனம், மொழி தெரியாது. அனைத்துத் தரப்பு மக்களாலும் புரிந்துக் கொள்ளப்படும், உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று உள்ளது என்றால் அது கலை மட்டும் தான். அப்படி அந்த கலையைப் பயன்படுத்தி தங்களுக்கு நிகழ்ந்த வேதனையான விஷயங்களையும், நிகழ்ந்த அவலங்களையும் வெளிப்படையாக பேசும் ஒரு தளமாக இந்த கலை மேடை உள்ளது. இதனைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் தங்களது வலியை எடுத்துச் சென்றதுடன், ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனவர்கள் நிறைய பேர். […]

நகைக்கடன் வழங்கும் முறை எளிமையாக்கப்படுமா?

அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்கிற ரிசர்வ் வங்கியின் புதிய விதி வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிக்குக் கருணை காட்டக் கூடாது!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை […]

31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

மக்களாட்சியின் உச்சத்தை இன்னும் எட்டவில்லை!

இன்று ஒரு பக்குவம் இழந்த, தத்துவார்ந்த விவாதங்களை இழந்த கொடூர குரோத வசைபாடும் அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்போடு நாம் நம் அரசியல் கருத்துக்களை வைக்கவும் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ளவும் வேண்டும். கடந்த 30 ஆண்டு காலமாக அரசியலுக்கு அடிப்படையான கொள்கை விவாதங்கள் நிராகரிக்கப்பட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்று பொருளாதாரத்தை மட்டுமே மையப்படுத்தி விவாதித்து மானுடத்தின் மதிப்பு மிக்க வாழ்க்கை விழுமியங்களை இழந்து வாழ்கின்றோம் என்ற புரிதலையும் ஏற்படுத்திக் கொண்டு செயல்பட […]