சோதிடம்

கூகி வா தியாங்கோ: சிந்திக்கும்போது எழுதவிடவில்லை!

இரண்டாயிரத்துக்கு முன்பு தாமரைச் செல்வி, நிழல் பதிப்பகங்களின் ஆசிரியர் ப.திருநாவுக்கரசுவை சந்திக்கச் சென்றிருந்தபோது, ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் காட்டி , “கென்ய எழுத்தாளர் கூகி அவர்களின் ‘Devil on the Cross” நாவலை தமிழில் கொண்டுவரப் போகிறேன். அமரந்தா மொழிபெயர்க்கிறார். டெல்லியில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கூகியை சந்தித்தேன். அவரே கைப்பட எழுதி மொழியாக்க ஒப்புதலைத் தந்துவிட்டார்!” என்றார். கூகி ஜேம்ஸ் வா தியாங்கோ என்ற பெரும் இலக்கிய போராளியின் பெயரை நான் முதலில் அறிந்தது […]

வர்ணஜால வார்த்தைகளால் அற்புத படைப்புகளைத் தந்த கவிஞர் காளிதாசன்!

காரைக்குடி அடுத்த திருப்பத்தூரைச் சேர்ந்தவர் கவிஞர் காளிதாசன். பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தில் தண்ணி குடம் எடுத்து என்ற பாடல், ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் தலை மகனே கலங்காதே பாடல் உட்பட பல பிரபல பாடல்களை எழுதியவர். இவர் தாலாட்டு என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் அறிமுகமாகி சட்டம் என் கையில் உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார். பின்னர் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து வைகாசி பொறந்தாச்சு படத்தில் காளிதாசன் என்ற பெயரில் […]

எம்.ஜி.ஆர். ஃபார்முலா எடுபடுமா விஜய்க்கு?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அப்பகுதி தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. எம்ஜிஆர் நின்று வெற்றி பெற்ற மதுரை மேற்கு தொகுதி விஜய்க்கு கை கொடுக்குமா? அரசியலில் மதுரை சென்டிமென்ட் சட்டமன்ற தேர்தல்களில் மதுரை மிக முக்கியமான இடமாகப் பார்க்கப்படுகிறது. மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் அதிக இடங்களில் வென்ற கட்சி மட்டுமே இதுவரை ஆட்சி அமைத்திருக்கிறது. குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியில் […]

என்னுடைய பாட்டு, யார் யாருக்கோ பெயர் வாங்கிக் கொடுத்தது!

வாய் திறந்த சிரிப்பு, முதன்முறை சந்தித்த போதே உரிமையுடன் பேச்சு – என்று கலகலவென்றிருந்தார் கவிஞர் வாலி. அவர் திரையுலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஒரு விழாவும், அதைத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பவுமான ஒரு திட்டம். நான் பணியாற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்திற்காக அது பற்றிய ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்து அதைக் கையோடு எடுத்துக் கொண்டு போயிருந்தேன் – இரண்டாவது முறை. கையில் கொடுத்ததும் அந்த டைட்டிலை ‘நியூமராலஜி’ படிக் கூட்டிப் […]

மாநிலங்களவையில் ஒலிக்கவிருக்கும் பெண் கவிக்குரல்!

கவிஞர் சல்மா. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கிய உலகில் எழுச்சியோடு உச்சரிக்கப்படுகிற பெயர். அதேநேரத்தில், திராவிடச் சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பால் அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயலாற்றி வருபவர். அவரால் விளைந்த பணிகளின் பயன்கள் இம்மண்ணில் உரம் பெற்ற ஒவ்வொரு தருணத்திலும், அந்த உழைப்புக்கான அங்கீகாரம் அவரைத் தேடிச் சென்றடைந்துள்ளது. இப்போது மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அவரைத் திமுக அறிவித்திருப்பதும், அந்த வகையில் சேர்கிறது. பெரும்பாலும் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்பு என்பதால், மாநிலங்களவையில் […]

ஒவ்வொன்றையும் உணர கால இடைவெளி தேவை!

தாய் சிலேட்: ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும்; சில சமயம் காலத்தின் இடைவெளி; சில சமயம் தூரத்தின் இடைவெளி! – சுந்தர ராமசாமி